சென்னை,ஜன.1- வளர்ந்து வரும் தேவைகளை முன்னிட்டு தமிழ்நாட்டில் புதிதாக 13 நகராட்சிகள் உருவாக்கம் செய்தும், 16 மாநகராட்சிகள் மற்றும் 41 நகராட்சிகளை விரிவாக்கம் செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு: அரசு, நகரமயமாதலின் வீச்சு, நிர்வாகத் தேவைகள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திறம்படவும், முழு அளவிலும் வழங்குதல், உள்ளா ட்சிப் பகுதிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, தகுதியான மேலும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பை மேற்கொள்வதென முடிவு செய்துள்ளது. தற்போது, 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் இம்மாதம் 5 ஆம் தேதியன்று நிறைவடைகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள நகர்ப்புறத்தன்மை வாய்ந்த ஊராட்சிகளை அருகிலுள்ள மாநக ராட்சிகள், நகராட்சிகளுடன் இணைக்கவும், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக அமைத்துருவாக்கம் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீர மைப்பு தொடர்பான உயர்நிலைக் குழு, மாவட்ட ஆட்சியர்களுடன் மேற்கொண்ட தொடர் ஆலோச னைகளின் அடிப்படையில், உரிய செயற்குறிப்புகள் பெறப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநக ராட்சி, மதுரை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது. திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளு டன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைத்துள்ளனர். பேரூராட்சிகளுடன் ஊராட்சி களை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சி களை உருவாக்கியும் உள்ளது. கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப் பட்டுள்ளது.
29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்க வும் உத்தேச முடிவினை மேற் கொண்டுள்ளது. இது தொடர்பாக தக்க சட்டவகை முறைகளின் கீழ் ஆணைகள் வெளி யிடப்பட்டு, உரிய நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான தர மான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை அளித்திடும் நோக்கத்தை சிறப்பான முறையில் எய்திடும் வகையில், தொடர்ச்சி யாக அமைந்துள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து, நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட வளர்ச்சிக்கான அனைத்து ஆதாரங்களும் சரியான அளவில் பயன்படுத்தப்படும் வகை யில் உட்கட்டமைப்பு வசதி மேம் பாட்டிற்கான ஒட்டுமொத்த திட்டமிடுதலை மேற்கொள்ளவும், இடஞ்சார்ந்த திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு காரணி களை ஒருங்கிணைத்தல் / திறம்பட செயலாக்குதல் மூலம் திட்ட மிடப்பட்ட நகர்ப்புற வளர்ச்சியை நெறிமுறைப்படுத்தவும் ஏதுவாகும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, முதலமைச்சரின் ஆணையின் பேரில் ஐந்து அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இவ்வரசாணைகள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளன. அரசு, நகரமய மாக்கலின் சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், சீரான நகர்ப்புற வளர்ச்சி, செம்மையான நிருவாகம் ஆகியவற்றை உறுதி செய்ய தேவையான இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.