சென்னை,ஜன.19- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஜனவரி 19 புதன்கிழமை யன்று மாநில தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில தேர்தல் ஆணையரி டம் ஆலோசனைகள் அடங்கிய கடிதம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுகநயினார் ஆகியோர் கலந்து கொண்டனர். கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள் வருமாறு: தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக, ஒரே தேதியில் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடைமுறைகளின் அனைத்து நிலைகளிலும் கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு நட வடிக்கைகளை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் சட்டமன்ற தேர்தலின் போது மேற் கொள்ளப்பட்டபடி, வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கையின் போது உரிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதி முழுமைக்கும் ஒரு வாக்குச்சீட்டு மட்டுமே பயன்படுத்தப் பட்டு இவிஎம் (EVM) இல் பொருத்தப் பட்டது. ஆனால் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி) ஒரு வார்டுக்கு ஒரு வாக்குச்சீட்டு தேவைப்படும் என்பதால் கவனமாக வாக்குச்சீட்டுகளை தயார் செய்யவும், அவற்றை இவிஎம் ( EVM) இல் பொருத்தவும் சம்மந்தப் பட்ட அலுவலர்களுக்கு கூடுதல் பயிற்சி யினை அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டு அளிக்க வேண்டும்.
வாக்காளர், வாக்குச்சாவடி பட்டியல், பூத் சிலிப்புகளை முன்கூட்டியே வழங்கிடுக!
வேட்பு மனு தாக்கல் செய்வது தொடர்பாகவும், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாகவும் அரசியல் கட்சி யினருக்கு கூட்டம் நடத்தி விபரங்களை தெரிவிக்க வேண்டும். மாநகராட்சி, நக ராட்சி தேர்தல் ஏற்பாடுகள் பற்றி அனைத்துக் கட்சிக் கூட்டம் தனியாக வும், அதே நாளில் பேரூராட்சி தேர்தல் ஏற்பாடுகளுக்கு தனியாகவும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச்சாவடி பட்டியல்களை முன்கூட்டியே அரசியல் கட்சியினருக்கு வழங்க வேண்டும். பூத் சிலிப் விநியோகம் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக பூத் லெவல் அலுவலர் மூலம் பூத் லெவல் முகவர் முன்னிலையில் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே வழங்க வேண்டும். அவசர கதியில் ஒரு நாளுக்கு முன்பு வழங்கினால் பெரும்பகுதி முறை கேடாக பயன்படுத்தப்பட்டு, விநியோ கம் செய்வதாகவே இருக்கும். இந்த விநியோகத்திற்கு கூடுதலான ஊழியர்கள் நியமித்து விட வேண்டும். மொத்தமாக அரசியல் கட்சியினருடன் வாக்குச்சீட்டுகளை கொடுப்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் குறித்த புகார்களை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க, தேர்தல் முறைகேடுகள், விதி மீறல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க மண்டலம் மற்றும் பகுதி வாரி யாக இரண்டு ஸ்குவார்டு காவல்துறை அதிகாரிகளுடன் இரண்டு சிப்ட் வாரி யாக கண்காணிப்பு செய்ய நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரி உட்பட இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பார்வை யாளராக நியமித்திட வேண்டும்.
சாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது
வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள், அன்பளிப்புகள் கொடுப்ப வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி, மதம் அடிப்படை யில் வாக்கு சேகரிக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்பதும், அதன்படி தேர்தல் பணிகள் மேற்கொள்ளவும் உறுதி செய்ய வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரடி தேர்தல் வழி யாக மாநகராட்சி மேயர் மற்றும் நக ராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்ய வலியுறுத்துகிறது. இது முறைகேடுகளை தவிர்க்க உதவும். ஊடகப் பிரச்சாரம் மட்டும் செய்வது சாத்தியமில்லை. வாகன ஒலிபெருக்கி அனுமதி உடனடியாக வழங்க வேண்டும். வாக்காளர்களைச் சந்திக்க 10 பேர் மட்டுமே உடன் செல்ல அனு மதி கொடுக்கப்பட வேண்டும். வாக்கா ளர் பட்டியலில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும். தேசிய கட்சி களின் சின்னங்களுக்கு வாக்குச்சீட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். வாக்காளர் மரணம், இடமாற்றம், இரண்டு இடத்தில் பெயர்கள் போன்ற வை சரிபார்த்தல் செய்ய வேண்டும். வாக்காளர் புகைப்படம் பட்டியலில் தெளிவான முறையில் இடம்பெற வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் மறுவரை யறைப்படி குடியிருக்கும் வார்டில் வாக்கு இல்லாமல் அடுத்த வார்டில் மொத்தமாக உள்ள வாக்காளர்களாக மாற்றப்பட்டுள்ளது. இவர்களை குடியிருக்கும் வார்டுகளுக்கே மாற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக பழனி நகராட்சியில் 15, 16, 17 ஆகிய வார்டுகளில் கடுமையாக குளறுபடி நடந்துள்ளதை சரி செய்ய தேர்தல் ஆணையம் அளித்த அறிவுறுத்தல் சரிசெய்யப்படவில்லை. இதனால் குடியிருக்கும் வார்டு ஒன்று, வாக்கு அளிக்கும் வார்டு வேறாக உள்ளது. இது போன்ற குளறுபடிகளை உடனடியாக சரி செய்து முறையான வாக்காளர் பட்டி யல் வெளியிட வேண்டும். வேட்பு மனுக்கு முதல்நாள் வரை கோட்டாட்சி யர் வசம் கொடுக்கும் வாக்காளர் சேர்த்தல், திருத்தம் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி சேர்க்கப்பட வேண்டும்.
வாக்காளர் துணை பட்டியல் அரசியல் கட்சி களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். வேட்புமனுக்களை சிறு தவறுகளுக்கு தள்ளுபடி செய்யக் கூடாது. புதிதாக அமைக்கப்பட்ட மாநக ராட்சி, நகராட்சிகளில் இட ஒதுக்கீடு போன்ற பிரச்சனைகளில் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டு முடி வெடுக்க வேண்டும். இது பற்றிய மனுக் கள் மீது உரிய வகையில் பரிசீலித்து முடி வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மனுத்தாக்கல் செய்வதற்கு குறைந்தபட்சம் 25 பேர் மட்டுமே வெளிப்பகுதியில் அனுமதிக்க வேண்டும். வேட்புமனுத்தாக்கல் முதல் வேட்பு மனு பரிசீலனை மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு, வாக்கு எண்ணிக்கை வரை ஒவ்வொரு நட வடிக்கையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். வேட்புமனுக்களின் பக்கங் களை குறிப்பிட்டு ஒப்புகைச் சீட்டு வழங்க விதிகளில் இடமில்லை என கூறப்படுகிறது. ஆனால் இதற்கென்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒப்புகைச் சீட்டில் வேட்புமனு பக்கங்களை குறிப்பிட வேண்டும். வேட்புமனுவை வேட்பா ளர் இமெயில் வழியாக அனுப்புவதை யும் ஏற்றுக் கொண்டு, பிறகு நேரில் தாக்கல் செய்ய அனுமதிக்கவேண்டும். வேட்பாளர்களுக்கு வழக்கு விபரங்களை காவல் நிலையங்களில் உடனுக்குடன் வழங்க வேண்டும். இதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது. கடந்த 2016 இல் ஆயிரம் ரூபாய் வாங்கப்பட்டது. ஒவ்வொரு காவல் நிலையத்தில் தனித்தனியாக வாங்கச் சொல்லக் கூடாது. ஒரே காவல்நிலை யத்தில் வழங்க வேண்டும். கொரோனா கால வழக்குகள் தள்ளுபடி செய்ததற்கு அரசு ஆணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்தில் தடையில்லா சான்று உடனடியாக வழங்க வேண்டும். வேட்புமனு கொடுக்க இணைக்க வேண்டிய சான்றுகள் பற்றிய விபரம் தெளிவாக வெளியிட வேண்டும். காலதாமதப்படுத்தாமல் சான்றுகள் கொடுக்க வேண்டும். வேட்பாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் இலவசமாக வழங்க வேண்டும்.
வாக்குச்சீட்டுகள் பொருத்தப்பட்ட இவிஎம் (EVM)-கள் மற்றும் வாக்குப்பதி விற்கு பயன்படுத்தப்பட்ட இவிஎம் (EVM)-கள் ஆகியவை உரிய பாது காப்புடன் அரசியல் கட்சியினர், வேட்பா ளர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூம் (Strong Room) இல் மூன்றடுக்குப் பாது காப்புடன் வைக்கப்பட வேண்டும். சிசிடிவி மூலம் கண்காணிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் போல் வேட்பாளரின் பிரதிநிதிகளை கண்காணிப்பு பணிக்கு அனுமதிக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் உள்பகுதியில் காவல்துறையை அனுமதிக்கக்கூடாது. வாக்குப்பதிவு, வாக்கும் எண்ணும் மையங்களில் கூடுதலான கண்காணிப்பு கேமராக்கள் அமைத்திட வேண்டும். வாக்கு எண்ணும் மையம் நல்ல விசாலமாக மின்னணு கருவியை பார்ப்பதற்கு ஏதுவாக அமைத்திட வேண்டும். வாக்கு எண்ணும் இடத்தில் குளறுபடி, சீர்குலைவு செய்து வாக்கு கணக்கினை தவறாக எழுதும் அதி காரிகள் மீதும், உதவி செய்யும் அதிகாரிகள் மீதும் உடனடியாக நட வடிக்கை எடுத்திட வேண்டும். வாக்கு கள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் முடிவு கள் காலதாமதமின்றி அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட வேண்டும்.
சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைத்திடுக!
வாக்கு எண்ணும் மையத்தில் ஒருதலைப்பட்சமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, வேட்பாளர் புகார் செய்தால், தேர்தல் தலைமை அதிகாரி முன்னிலையில் வாக்கு எண்ணும் பணியை நடத்த வேண்டும். சட்டமன்றத் தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் மற்றும் தேர்தல் செலவினங்களை கண்காணிக்கவும் சிறப்புக் குழுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ட்ரோல் ரூம் அமைத்து கண் காணிப்பு பணியினை மேற்கொண்டது போல், நகர்புற உள்ளாட்சி தேர்த லில் பிரச்சனைகள் அதிகம் இருக்கும் என்பதால் வட்ட அளவில் துணை ஆட்சி யர் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்தி கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும். அரசியல் கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடர்பு கொள்ள வேண்டிய அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை புத்தகமாக தொகுத்து மாவட்ட அளவில் வழங்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பிரச்சார அனுமதி, வாகன அனுமதி மற்றும் இதர அனுமதி ஆகியவற்றை ஒற்றை சாளர முறை என்ற அடிப்படையில் ஒரே இடத்தில் பெறுவதற்கான (வட்ட அளவில்) ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தபால் வாக்குச்சீட்டுகளை முறை யாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப் படும் அனைவருக்கும் அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ள னர். இந்த ஆலோசனைகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ள னர்.