சென்னை, ஜன. 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கோவை, விளாங்குறிச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கடந்த சில நாட்களாக பயிற்சி முகாம் நடத்தி வரு கின்றனர். கோவையில் திட்டுமிட்டு மதமோத லை உருவாக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் முகாம் நடத்துவதாக எதிர்ப்பு தெரி வித்து பல்வேறு அமைப்பினர் காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.
இந்நிலையில் இம்முகாமை பார்வை யிடச் சென்ற கோவை காவல் துணை ஆணை யரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பள்ளி வளா கத்திற்குள் உள்ளே நுழைய விடாமல் தடுத்து ரகளை செய்ததுடன், அவரை தாக்கும் நோக்கோடு கீழே தள்ளியுள்ளனர். ஏற்கனவே கல்வி கூடங்களில் மத நிகழ்வுகள் நடத்தக் கூடாது என வலியுறுத்தி மாநகர காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரி விக்கப்பட்டது. அதையும் மீறி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இந்த பயிற்சி முகாமை நடத்தி வருகின்றனர்.
இதனை தடுப்பதற்கு கோவை மாநகர காவல்துறையினர் எந்த நடவடிக்கை யும் எடுக்காததன் விளைவே காவல்துறை அதி காரியையே தாக்கியுள்ளனர். எனவே, காவல்துறை அதிகாரி மீது தாக்கு தல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை உடனடி யாக கைது செய்ய வேண்டுமெனவும், மதமோத லை உருவாக்கும் வகையிலும், மக்கள் ஒற்றுமை யை சீர்குலைக்கும் வகையிலும், சதி வேலைக்கு திட்டமிட்டு நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் பயிற்சி முகாமை உடனடி யாக ரத்து செய்வதுடன், இந்த அமைப்பினர் மீது சட்டப்பூர்வ விசாரணை நடத்த வேண்டுமென வும், இந்த முகாமிற்கு அனுமதித்த அளித்த பள்ளி நிர்வாகத்தின் மீதும் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.