tamilnadu

img

சிபிஎம் தென்காசி மாவட்டச் செயலாளராக பி. உச்சிமாகாளி தேர்வு

தென்காசி, நவ, 10  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்ட  இரண்டாவது மாநாடு குற்றாலத்தில் நவ. 9,10 தேதிகளில்  நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.உச்சி மாகாளி, தங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்  கிருஷ்ணமூர்த்தி  தலைமை தாங்கினர். மாநாட்டுக் கொடி யை  மூத்த தோழர் பாலுச்சாமி ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாரி யப்பன் வரவேற்றார்.  மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் துவக்கி வைத்தார். வேலை, வரவு செலவு அறிக் கைகளை மாவட்ட செயலா ளர் உ.முத்துப்பாண்டியன், நிதி காப்பாளர் குணசீலன் சமர்ப்பித்தனர்.  மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகம்மது, மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்க ரன் வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து  மாநிலக் குழு உறுப்பினர் பி.சுகந்தி பேசினார். 

புதிய மாவட்டக்குழு தேர்வு

மாநாட்டில் 27 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது;  மாவட்ட செயலாளராக பி. உச்சிமாகாளி தேர்வு  செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  களாக உ.முத்துப்பாண்டி யன், குணசீலன், கணபதி, தங்கம், கண்ணன், அசோக்ராஜ், அயூப் கான், வேலு மயில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் தென்காசி மாவட்டத்தில்  அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி,  கலைக் கல்லூரி அமைக்க  வேண்டும்.  அதிகமாக விளையும் மலர்களை பயன்படுத்தி சென்ட் தொழிற்சாலை உருவாக்க வேண்டும். பீடி தொழி லாளர்கள் அதிகமாக உள்ள தால்  தென்காசியில் தொழி லாளர் நல அலுவலகம் உருவாக்க வேண்டும். மதுரை - தென்காசி, தென்காசி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலை பணி களை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.  மாவட்ட அலு வலகங்கள் பல இன்னும் திருநெல்வேலியில் தான் உள்ளன; அவை அனைத் தையும் தென்காசியில் அமைக்க வேண்டும்.  பழைய குற்றால அருவியை வனத்துறையிடம் ஒப்ப டைக்கும் முடிவை மாவட்ட  நிர்வாகம்  கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.