சென்னை, மார்ச் 24 - குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் வழங்குவதை கைவிட கோரி வெள்ளி யன்று (மார்ச் 24) தாம்பரம் கோட்டாட்சி யர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு வருவாய் துறை நோட்டீஸ் அளித்து வருகிறது. குறிப் பாக, பல்லாவரம் பெரிய ஏரி, நெமிலிச் சேரி ஏரி, வீரராகவபுரம் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள் ளது. அரசே மறுகுடியமர்வு செய்த பகுதிகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட் டுள்ளது. இந்நிலையில், குடியிருப்பு களை அகற்ற நோட்டீஸ் வழங்குவதை கைவிட வேண்டும், நில வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்மு கம் பேசியதாவது: புறம்போக்கு நிலத்தில் பிறந்து, வாழ்ந்து, மக்கள் மடிவதற்கு அரசு முடிவுகட்ட வேண்டும். அரசு நிலங்க ளில் வசிப்போருக்கு அந்நிலங்களை சொந்தமாக்க வேண்டும். ஒவ்வொரு நிலத்தையும் வகைப்படுத்தி ஆவணங் களை உருவாக்கியது அரசுதான். ஏரி களை பேருந்து நிலையங்களாக அரசு தான் மாற்றியது. சென்னையில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பல ஏரி கள் குடியிருப்பு பகுதிகளாக மாற்றப் பட்டுள்ளன. எனவே, தற்போதுள்ள சூழ் நிலைகளை கருத்தில் கொண்டு, மக்கள் தேவைகளை உணர்ந்து நிலங்களை வகைமாற்றம் செய்ய வேண்டும். ஏரி நீர் பிடிப்புகளை தவிர்த்து, பயனற்ற பிற பகுதிகளில் வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும்.
அரசு நிலங்களில் வசிப்போருக்கு அந்நிலங்களை சொந்தமாக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது. நீதி மன்றங்களில் பழைய ஆவண ங்களின் அடிப்படையில் வழக்குகள் தொடுக்கப்படுகிறது. அரசு வழக்கறி ஞர்கள் தற்போதுள்ள உண்மை நிலையை கூறி வாதாடுவதில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி முதலமைச்சரிடம் நேர டியாகவே வலியுறுத்தியது. இதன் விளைவாக, தமிழ்நாடு அரசு 19.1.2023 அன்று வருவாய்த்துறை அரசாணை 35ஐ வெளியிட்டுள்ளது. இதன்படி நிலங்களை உட்பிரிவு செய்து மாவட்ட ஆட்சியரே பட்டா வழங்க முடியும். இந்த அரசாணை அமல்படுத்தினால் 90விழுக்காடு பிரச்சனை தீரும்.
எனவே, புதிய அரசாணை வெளி யிட்டுள்ள நிலையில், குடியிருப்பு களுக்கு நோட்டீஸ் வழங்குவதை நிறுத்த வேண்டும். குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க கூடாது. அரசாணை ப்படி, மாவட்ட ஆட்சியர் உட்பிரிவு செய்து குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும். புறம்போக்கு நிலத்தில் உள்ள அனைத்து குடியிரு ப்புகளுக்கும் பட்டா வழங்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் 72 ஆயிரம் ஏக்கர் அரசு மற்றும் தனியார் தரிசு நிலம் உள்ளது. நிலம் இருக்கிறது; செய்வதற்கு மனம்தான் இல்லை. இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து வரு வாய் கோட்டாட்சியர் செல்வக்குமாரை சந்தித்து மார்க்சிஸ்ட் கட்சித் தலை வர்கள் மனு அளித்து பேசினர். மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், பகுதிச் செயலாளர்கள் தா.கிருஷ்ணா (தாம்பரம்), எம்.சி.பிரபா கரன் (பல்லாவரம்), மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.நரசிம்மன், எம்.தாமு, மாநகராட்சி உறுப்பினர் விஜய லட்சுமி மற்றும் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பி.ஜீவா உள்ளிட்டோர் பேசினர்.