tamilnadu

img

நூலகக் கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தி சிபிஎம் போராட்டம்

நூலகக் கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தி சிபிஎம் போராட்டம்

நாமக்கல், ஜூன் 4- ராசிபுரம் அருகே உள்ள பழுத டைந்த கிளை நூலகக் கட்ட டத்தை சீரமைக்க வேண்டும், என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபு ரம் வட்டம், ஆர்.புதுப்பட்டி பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதியில் 1969 ஆம் ஆண்டு கிளை நூலகம் துவங் கப்பட்டது. இந்நூலகத்தில் 23,247 புத்தகங்கள் உள்ளன. இணைய இணைப்பு மூலம் கணினி உள்ளது. இந்நிலையில், இந்நூலகம் 2000 ஆம் ஆண்டிலிருந்து பழுதடைந்து,  தற்போது சுவரில் பெரிய அளவி லான விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.  கட்டிடத்தின் மேற்கூரை சிதல மடைந்து, மழைக்காலங்களில் நூல்கள் நனைந்து சேதமாகி வரு கின்றன. குறுகிய இடத்தில் செயல் படும் நூலகத்தில் ஏராளமான அரிய  வகை நூல்கள் இருந்த போதிலும், வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கு போதுமான இட வசதியோ வெளிச்சம், காற்றோட்டம் இல்லா மல் இருக்கிறது. தற்போது நூல கத்துறையின் சார்பில் வழங்கப் பட்டுள்ள, புதிய அலமாரிகள் மற் றும் கணினி, நாற்காலிகள் வைப்ப தற்கான இட வசதி இல்லை. புத்த கங்கள், மேசைகள், அலமாரிகள், நாற்காலிகள் போன்றவை கரை யான்கள் அரித்து பயன்படுவதற்கு ஏற்ற நிலையில் இல்லை. மேலும், புதுப்பட்டி துலுக்க சூடாமணி மாரியம்மன் கோவில் அருகில் நூலகம் இருப்பதால், நூலக வாசலை முடி எடுக்கும் இட மாக பயன்படுத்தப்படுகிறது. இத னால் கூர்மையான பிளேடுகள் மற் றும் முடிகள் நூலகத்தை சுற்றி கிடப் பதால், வாசகர்கள், பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. இந்நூலக கட்டடம் சிதலமடைந்து மரம், செடி, கொடிகள் வளர்ந்து கிடப்பதால், நூலகத்தை சுற்றி யுள்ள பகுதிகள் மலம், சிறுநீர் கழிப்பிடமாக மாறிவிட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல்  இந்த நூலகத்தை புதுப்பிக்க வேண் டும். புதிய நூலகக் கட்டடம் கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை. இந்நூல கத்திற்கு அறிவுசார் மையமாக மாற் றுவதற்கு, தமிழக அரசு நிதி ஒதுக் கியும், நூலகத்துறை மற்றும் பேரூ ராட்சி நிர்வாகம் போதிய ஒத்து ழைப்பு வழங்காததால், அத்திட்டம்  வேறு பேரூராட்சிக்கு மாற்றப்பட் டுள்ளது. எனவே, பழுதடைந்த கிளை நூலகக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும், என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர். புதுப்பட்டி கிளை சார்பில், குடை பிடித்து நூல் வாசிக்கும் போராட் டம் புதனன்று நடைபெற்றது. நூல கக் கட்டடம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, கட்சியின் கிளைச் செயலாளர் ஆர்.ரஜினி தலைமை வகித்தார். கிளை நிர் வாகிகள் சின்ன பாப்பா, புகழேந்தி,  முருகேசன் ஆகியோர் முன்னிலை  வைத்தனர். கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஏ.டி. கண்ணன் துவக்கவுரையாற்றி னார். ஒன்றியச் செயலாளர் வி.பி. சபாபதி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், எஸ்.நர்மதாதேவி, தொப்பம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இ.குப்பண்ணன் உட்பட பலர்  கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, 500க்கும் மேற்பட்டோரி டம் கையெழுத்து பெற்ற கோரிக்கை மனுவை பேரூராட்சி செயல் அலுவலரிடம் மார்க் சிஸ்ட் கட்சியினர் வழங்கினர். அதைப்பெற்று கொண்ட அவர்,  உடனடியாக புதிய கட்டடம் கட்டு வதற்கும், மழையில் நனையாமல் புத்தகங்களை பாதுகாக்க உரிய நட வடிக்கை மேற்கொள்வதாகவும், உறுதியளித்தார்.