tamilnadu

img

இந்து முன்னணி அராஜகத்தை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி அராஜகத்தை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜுன் 21-  திண்டுக்கல் தாடிக்கொம்பில் வெள்ளியன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை தாக்கிய இந்து முன்னணி, பாஜகவினரை கைது செய்யக் கோரி, மாநிலம் முழுவதும் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகரச் செயலாளர் எம்.டி. கேசவராஜ் தலைமை வகித்தார். திருவாரூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். சுந்தரய்யா, கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் கே. கோபிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் கண்டன உரையாற்றினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜி. ரகுராமன் கே.பி. ஜோதிபாசு, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா, மாவட்டச் செயலாளர் இரா. மாலதி, மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர உறுப்பினர்கள் கட்சித்தோழர்கள் கலந்து கொண்டு கண்டனர். நாகப்பட்டினம்  நாகப்பட்டினத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஐஎம் மாநில குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி கண்டன உரையாற்றினார். நாகை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ. வடிவேல், நாகை நகர செயலாளர் க. வெங்கடேசன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி. அருள்தாஸ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எம். முகேஷ் கண்ணன் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.  நாகப்பட்டினம் மாவட்டம், சிபிஎம் கீழ்வேளூர் ஒன்றியம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து கண்டன உரையாற்றினார். கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம். அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அறந்தாங்கி  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே, ஒன்றியச் செயலாளர் எம். நாராயண மூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் தங்கராஜ், சிபிம் நகரச் செயலாளர் எல். அலாவுதீன், சிஜடியூ மாவட்ட துணைச் செயலாளர் ஆர். கர்ணா, தீண்டாமை ஒழிப்பு முன்ணனி மாவட்ட பொருளாளர் கவிபாலா, சிஐடியு கோபால், வாலிபர் சங்க நிர்வாகிகள் கோபால், பாண்டி கௌதம், சங்கர், உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.