கோவை, ஜூலை 22- சுடுகாட்டை சீரமைத்து தர வேண்டி கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கையில் தீப்பந்தத்துடன் போராட்டத்தில் ஈடு பட்டனர். கோவை, ஒண்டிபுதூர் அடுத்த நெசவாளர் காலனி இட்டேரி சாலையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பொது சுடுகாடு ஒன்று பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது மாநகர எல்லையில் உள்ள சுடுகாடு என்பதால் பராம ரிப்பு இன்றி சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த சுடுகாட்டை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் ஆயிரக்கணக் கானோர் வசித்து வருகின்றனர். சுடுகாடு சிதிலமடைந்து, புதர் மண்டி, தெருவிளக்குகள் ஏதுமின்றி காணப்ப டுவதால், இறுதிச் சடங்குகள் செய்வதற்கு இறந்தவர்களின் உறவினர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சுடுகாட்டை சீரமைத்து தரக்கோரி மாநகராட்சியிடம் பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இந்த நிலையில் சுடுகாட்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கூறி, சுடுகாட்டின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுடுகாட்டில் நிரந்திரமாக பணியாளர்கள் நியமிக்க வேண்டும், மின்விளக்குகள் மற்றும் மயான மேற்கூரை உள்ளிட்ட வசதிகளை செய்து தர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள், கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு முழக்கங்க ளை எழுப்பினர். முன்னதாக இந்த போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சி யின் திருவள்ளுவர் நகர் சிபிஎம் கிளை செயலாளர் வேலு சாமி தலைமை தாங்கினார். இதில், சிபிஎம் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.தெய்வேந்திரன், மாவட்டக்க குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி, சிஐடியு நிர்வாகி கே.ரத்தின குமார், சிபிஎம் சிங்கை நகரக்குழு உறுப்பினர்கள் சீனி வாசன், தமிழ்ச்செல்வன் மற்றும் ஒண்டிபுதூர் சிபிஎம் கிளை செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.