tamilnadu

img

சிபிஎம் மேற்குவங்க மாநில முதுபெரும் தலைவர் தோழர் பாசுதேவ் ஆச்சார்யா மறைவு!

புதுதில்லி, நவ.13 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த முதுபெரும் தலைவர் தோழர் பாசுதேவ் ஆச்சார்யா கால மானார். அவருக்கு வயது 81.  முதுமை சம்பந்தப்பட்ட உடல்நலக் குறைவு காரண மாக, ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டிருந்த நிலை யில், தோழர் பாசுதேவ் ஆச்சார்யா திங்களன்று காலமானார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: முதுபெரும் கம்யூ னிஸ்ட், நாடாளுமன்றவாதி மற்றும் தொழிற்சங்கத் தலை வரான தோழர் பாசுதேவ் ஆச்சார்யா மரணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. 1942 ஜூலை 11 அன்று புருலியாவில் பிறந்த பாசு தேவ் ஆச்சார்யா, தன் மாண வப் பருவத்திலேயே அரசி யலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பள்ளி ஆசிரிய ராக இருந்த அவர் வேலை யைத் துறந்துவிட்டு, கட்சி யின் முழுநேர ஊழியரா னார்.

1981-இல் அவர் கட்சி யின் புருலியா மாவட்டக் குழு விற்கும், 1985-இல் மேற்கு வங்க மாநிலக் குழுவிற்கும், 2005-இல் கட்சியின் மத்தியக் குழுவிற்கும் தேர்ந் தெடுக்கப்பட்டார். 2018-இல் கட்சியின் மத்தியக் கட்டுப் பாட்டுக்குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிற்சங்க இயக்கத் தில் சுறுசுறுப்பாக இயங்கி வந்த தோழர் பாசுதேவ் ஆச்சார்யா, பிரதானமாக ரயில்வே மற்றும் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் தலைவராக இருந்தார். அவர் சிஐடியு-வின் துணைத் தலை வர்களில் ஒருவராகவும் இருந்தார். ஒரு நிகரற்ற நாடாளுமன்றவாதியாகத் திகழ்ந்த தோழர் பாசுதேவ் ஆச்சார்யா, மக்களின் பிரச்ச னைகளை எப்போதும் எடுத்துக் கொண்டிருந்தார். 1980 முதல் 2009 வரை  ஒன்பது முறை அவர் நாடாளு மன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் தலைமைக் குழு அவருடைய இரு மகள் களுக்கும், மகனுக்கும் தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளது.  (ந.நி.)