tamilnadu

img

கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் பெட்ரோல் விலை குறையாமல் இருப்பது ஏன்?

சென்னை, செப். 6 - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும், இந்தியாவில் பெட்ரோ லிய பொருட்களின் விலை குறை யாமல் இருப்பது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் செப்.7 அன்று தமிழ்நாடு  முழுவதும் ஒன்றிய அரசு அலுவ லகங்கள் முன்பு மறியல் நடை பெறுகிறது. தென் சென்னை மாவட்டத்தில் கிண்டி ரயில் நிலையத்தில் மறியல் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தை விளக்கி  சிட்லபாக்கத்தில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்  கூட்டத்தில் பேசிய ஜி.ராம கிருஷ்ணன், சிஏஜி வெளிக் கொண்டு வந்துள்ள ஆயுஷ்மான்  பாரத் திட்ட முறைகேடுகளை  விளக்கினார். பட்டினி குறியீட்டில் இந்தியா பின்னோக்கி செல்வ தையும், இந்தியாவின் வளங்கள்  அதானி, அம்பானிக்கு மாற்றப் படுவதையும் விமர்சித்தார். இந்தியாவில் பயன்படுத்தப் படும் பெட்ரோல் 47 விழுக்காடு இந்தியாவில் கச்சா எண்ணெய் எடுத்து, சுத்திகரித்து உற்பத்தி செய்யப்படுகிறது.

இதற்கான உற்பத்தி செலவு குறைவு. சர்வதேசச் சந்தையில் இருந்து  53 விழுக்காடு கச்சா எண்ணெய்  இறக்குமதி செய்து, சுத்திகரிக்கப் படுகிறது.  இதற்கான உற்பத்தி செலவு சற்று அதிகம். சர்வதேசச் சந்தையில் கச்சா  எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துவிட்டது. ஆனால் பெட்ரோலிய பொருட் களின் விலை குறையவில்லை. இரண்டு வகையான பெட்ரோலுக் கும் ஒரே விலை தீர்மானிப்பதும்,  அவற்றிற்கான வரிகளை தொடர்ந்து உயர்த்தி வருவது தான் விலை குறையாமல் இருப் பதற்கு காரணம் என்றார். இதனை  ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்திற்கு சிட்லப்பாக்கம் கிளைச் செயலா ளர் ஆர்.தமீம் பாஷா தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல் முருகன், செயற்குழு உறுப்பினர்  ஜி.செந்தில்குமார், தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிரு ஷ்ணா, சிஐடியு மாவட்டத் தலை வர் இ.பொன்முடி,  பகுதிக்குழு உறுப்பினர் ஏ.சாதிக்பாஷா, எஸ்.ெஜயபிரகாஷ் உள்ளிட்டோர்  பேசினர்.