விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நகரச் செயலாளர் எஸ்.காத்தமுத்து தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் நகர் மற்றும் ஒன்றியக்குழுக்கள் சார்பில் தலா ரூ.2லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சம் கட்சி நிதி அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், எம்.முத்துகுமார், வி.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.