ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்
திருச்சிராப்பள்ளி, ஜுன் 20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குப் பகுதிக்குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் வியாழனன்று நடைபெற்றது. பிரச்சார இயக்கத்திற்கு மேற்கு பகுதிச் செயலாளர் ரபீக் அஹமத் தலைமை தாங்கினார். இதில் நடராஜன், ஆசிக் அலி, சுப்பிரமணியன், சீனிவாசன், ராஜ மகேந்திரன், ரபீக், ஹரி பாஸ்கர், இருதயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு உ.திருமலை, கடைவீதி, கள்ளங்காடு மேட்டுத்தெரு கீழத்தெரு, கொடாப்பு பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்தனர். துறையூர் ஒன்றியத்தில் காளிப்பட்டி, பகழவாடி கண்ணனூர் பகுதிகளில் ஒன்றிய செயலாளர் சங்கிலிதுரை தலைமையில் பிரச்சாரம் நடந்தது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆனந்தன், ராஜேஸ், குமார், ஆறுமுகம், பாக்கியராஜ், பக்குருதீன் அலி, பொன்னுச்சாமி, சிவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியம் திருவெள்ளரை கடைவீதியில் முருகேசன் தலைமையில் பிரச்சாரம் நடந்தது. இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் நடராஜன், ஒன்றிய செயலாளர் என்.சுப்ரமணியன், ஆணைமுத்து, கிளைச் செயலாளர்கள் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் வாழவந்தான் கோட்டை பகுதியில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.ஜெயசீலன், ஒன்றியச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொன்மலை பகுதிக்குழு ஏர்போர்ட் கட்சி கிளை சார்பில் செம்பட்டு, புதுத்தெரு, பட்டத்தம்மாள் தெரு, ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு ஆகிய பகுதிகளில் நடந்த பிரச்சார இயக்கத்திற்கு கிளைச் செயலாளர் சித்ரா தலைமை தாங்கினார். இதில், பகுதிச் செயலாளர் விஜயேந்திரன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, ரமேஷ், புவனேஸ்வரி, சேகர், தோழர் எல்.ஐ.சி ஜோன்ஸ், போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மணப்பாறை வட்டம் பன்னாங்கொம்பு, சமத்துவபுரம், காரைக்குளம் மற்றும் புத்தாநத்தம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், மணப்பாறை வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், வட்டக்குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரியலூர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் மக்கள் சந்திப்பு நடைபயண பிரச்சார இயக்கம் சிபிஎம் வட்ட செயலாளர் எம்.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. நடைபயணத்தை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான நாகை மாலி தொடங்கி வைத்து பேசினார். நடைபயணத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.பரமசிவம், டி. அம்பிகா, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.இளவரசன், ஆர். செந்தில்வேல், ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். இதில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் ஆகியோர் பேசினர். நடைபயணமானது இலையூர், வாரியங்காவல், குவாகம், கொடுக்கூர், இடையக்குறிச்சி, அழகாபுரம், சிலம்பூர், ஆண்டிமடம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் நடைபெற்றது. இதில், ன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர் சுமதி, ஆர்.காசிநாதன், எம்.வீராசாமி, ஆர்.முருகன், வி.வளர்மதி, ஜி.பெரியசாமி, எம். ராஜா, எம்.சங்குபாலன், எஸ். பழனி, எஸ்.சாந்தினி, ஏ.கன்னிமேரி, பி.ராணி, எஸ் .ஜெயராமன், கே. முருகன், கே.அசோகன், கே.பச்சைமுத்து, எஸ்.பரமசிவம், ஏ.அருளப்பன் ஏ.கலியபெருமாள், பி. சுந்தரமூர்த்தி, எஸ். ஸ்ரீதர், பி. ராமமூர்த்தி, கே.செந்தில், எம்.விஸ்வநாதன் உள்ளிட்ட பலரd கலந்து கொண்டனர். பெரம்பலூர் பெரம்பலூர் வட்டம், ஆலம்பாடி கிராமத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு ஒன்றியச் செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசி, மாவட்ட குழு உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன், மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி உரை ஆற்றினார். இந்த பிரச்சார இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், கிராமம் முழுவதும் சுற்றி வந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன், போக்குவரத்து இடைக்கமிட்டி செயலாளர் ஆர்.மணிமாறன் ஆகியோர் தலைமை வகித்தனர். புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பிரச்சாரப் பயணத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி கொடி அசைத்து தொடங்கி வைத்து உரையாற்றினார். பிரச்சாரப் பயணத்தை வாழ்த்தி மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் ஆகியோர் பேசினர். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கவிவர்மன், சு.மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.கண்ணம்மாள், எஸ்.பாலசுப்பிரமணியன், க.முகமதலிஜின்னா, அ.மணவாளன், டி.காயத்ரி, சிஐடியு மாநகர ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.ரகுமான் உள்ளிட்டோர் பேசினர். குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ். கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ.. பிரச்சாரப் பயணத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பெருமாள், மூத்த தோழர்கள் எஸ்.பீமராஜ், எம்.சண்முகம் உள்ளிட்டோர் பேசினர். திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தில் நடைபெற்ற பிரச்சாரப் பயணத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், கி.ஜெயபாலன், டி.சலோமி, நகரச் செயலாளர் ஏ.ஆர். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ உரையாற்றினார். ஒன்றியம் முழுவதும் நடைபெற்ற பிரச்சாரத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மக்கள் சந்திப்பு பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக, செங்கிப்பட்டி கடைவீதியில் வியாழக்கிழமை மாலை பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி. கண்ணன், எஸ். தமிழ்ச்செல்வி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சோலை.ரமேஷ், மருதமுத்து, எல்.ராஜாங்கம், சித்திரவேல், எம்.ஜி.சரவணன், அறிவழகன், மலர்க்கொடி, காமராஜ், கண்ணன், தங்கமணி, குணசேகரன், மதி, வெங்கடேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாத்தூரில், வெள்ளிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், இருசக்கர வாகனங்களில் சென்று, மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. அபிமன்னன் கொடியசைத்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சரவணன், ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராசு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சி.சரிதா, கே. பன்னீர்செல்வம், எஸ். வனரோஜா, சௌந்தர்ராஜன், நாகலிங்கம், டி.சண்முகவேல் மற்றும் பலர் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டனர். திருவாரூர் வலங்கைமான் ஒன்றியம், ஆலங்குடி கடைவீதியில் மக்கள் சந்திப்பு கிளர்ச்சி இயக்கத்தின் இருசக்கர வாகன பிரச்சாரத்தை சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி துவக்கிவைத்து உரையாற்றினார். இயக்கத்திற்கு ஒன்றியச் செயலாளர் டி.சண்முகம் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கே.சுப்பிரமணியன் மற்றும் பலர் உரையாற்றினர். பிரச்சார பயணத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், தோழர்கள் பங்கேற்று வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள கொக்கலாடி, வேடம்பூர், கொட்டையூர், ஆவூர், கோவிந்தக்குடி உள்ளிட்ட பல்வேறு மையங்களில் பிரச்சாரம் செய்தனர். நிறைவாக வலங்கைமான் கடைவீதியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி சிறப்புரையாற்றினார். இதேபோல், சிபிஎம் குடவாசல் வடக்கு ஒன்றியம் சார்பாக, மக்கள் சந்திப்பு இயக்கம் ஒன்றியச் செயலாளர் கே. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. கூத்தனூரில் துவங்கி எரவாஞ்சேரியில் பிர்சாரம் நிறைவடைந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.தீனதயாளன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி உரையாற்றினர். பிரச்சாரப் பயணத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே. ரவிச்சந்திரன், பி. செல்வராஜ் மற்றும் கிளைச் செயலாளர்கள் கோரிக்கைகள் அடங்கிய துண்டறிக்கைகளை வீடு வீடாகச் சென்று வழங்கினர். மன்னார்குடி நீடாமங்கலம் ஒன்றியக் குழுவின் சார்பாக, ஒன்றிய கிராமங்களான பழைய நீடாமங்கலம், அனுமந்தபுரம், பழங்களத்தூர், ஒட்டக்குடி, பச்சைகுளம், வாழச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஜான் கென்னடி தலைமையில் நடைபெற்ற இப்பிரச்சாரத்தை மாவட்டக் குழு உறுப்பினர் வி.எஸ். கலியபெருமாள் வையகலத்தூரில் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் டி. முருகையன், நீடாமங்கலம் பெரியார் சிலை எதிரில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தை முடித்து வைத்து உரையாற்றினார்.