tamilnadu

img

பஹல்காம் தாக்குதலில் பலியானோருக்கு சிபிஎம் அஞ்சலி

பஹல்காம் தாக்குதலில் பலியானோருக்கு சிபிஎம் அஞ்சலி

மன்னார்குடி, ஏப்.26  பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான அப்பாவி மக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மன்னார்குடி தேரடியில் நடைபெற்றது.  சிபிஎம் நகரக்குழுச் செயலாளர் ஜி. தாயுமானவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்டக்குழு உறுப்பினர் ஆறுபிரகாஷ், ஒன்றிய செயலாளர் கே. ஜெயபால், நகரக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  கோட்டூர்  கோட்டூர் பேருந்து நிலையம் எதிரில் ஒன்றியச் செயலாளர் கே. கோவிந்தராஜ் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  முத்துப்பேட்டை முத்துப்பேட்டை பேருந்து நிலையத்தில், ஒன்றியச் செயலாளர் கே. பழனிச்சாமி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் சி. செல்லத்துரை, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  திருவாரூர் குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து  நிலையம் அருகே நடைபெற்ற  அஞ்சலி-கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி. லெனின், நகரச் செயலாளர் டி.ஜி.  சேகர் ஆகியோர் தலைமை வகித்த னர். நிகழ்ச்சியில், சிபிஎம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தர மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஆர். லெட்சுமி, பா. சுகதேவ்  மற்றும் ஒன்றிய, நகரக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். வலங்கைமான் வலங்கைமான் ஒன்றியம்,  ஆலங்குடியில் நடைபெற்ற அஞ்சலி-கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  ஒன்றியச் செயலாளர் டி.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கந்தசாமி கண்டன உரையாற்றினார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் கே. சுப்பிரமணியன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். கொரடாச்சேரி  இதேபோல் கொரடாச்சேரி ஒன்றியத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் கே.கோபிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் கண்டன உரை யாற்றினார். மாவட்டக் குழு உறுப்பி னர் கே. சீனிவாசன் மற்றும் ஒன்றியக்  குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  நாகப்பட்டினம்  சிபிஐஎம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வடக்கு ஒன்றி யம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிபிஐஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரி முத்து, கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச்  செயலாளர் என்.எம். அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.