tamilnadu

img

பாதிக்கப்பட்ட மாணவரை சிபிஎம் தலைவர்கள் சந்தித்து ஆறுதல்

திருநெல்வேலி, ஆக. 16 நாங்குநேரியில் சக மாணவர்களால் வெட்டப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தாயாரை புதன்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் ஆர்.கருமலையான், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநில குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், பி.கற்பகம், மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.மதுபால், மாவட்டச் செயலாளர் எம். சுடலைராஜ், பிஎஸ்என்எல் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.