புதுச்சேரி, செப்.1- அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வை எதிர்த்து புதுச்சேரியில் வீடு வீடாக திண்ணை பிரச்சார இயக்கம் துவங்கியது. ஒன்றிய பாஜக அரசு, மாநில என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியின் தவ றான மக்கள் விரோத கொள்கைகளால் ஏற்பட்டுள்ள கடுமையான , விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செப்டம்பர் 7ல் புதுச்சேரி, காரைக்காலில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இப் போராட்டத்தை மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையில் செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து 6 ஆம் தேதி வரை வீடு வீடாக மக்களை சந்தித்து திண்ணைப் பிரச்சார இயக்கம் புதுச்சேரி முழுவதும் நடைபெறுகிறது. பிரச்சாரம் துவக்கம் புதுச்சேரி நேரு வீதி, மிஷின் வீதி சந்திப்பில் துவங்கிய பிரச்சாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பிரச்சாரத்தை துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் பேசினார். மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பி னர்கள் சீனுவாசன், கொளஞ்சியப்பன், பிரபு ராஜ் ,சத்தியா, தமிழ்ச்செல்வன், நகர கமிட்டி செயலாளர் மதிவாணன், உழவர்கரை நகர செயலாளர் ராம்ஜி மற்றும் மாநில குழு உறுப்பினர்கள் ராமசாமி,சரவணன், இளவரசி, ஆனந்த், சஞ்சய் உட்பட திரளா னோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். இதேபோல் பாகூர் மன்னாடிபட்டு வில்லி யனூர் ஆகிய இடைக்கமிட்டிக்கு உட்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் குழுக்களாக சென்று பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரத்தை கொடுத்து பிரச்சா ரம் செய்தனர்.