tamilnadu

சிபிஎம் குமரி மாவட்ட மாநாடு இன்று எழுச்சித் துவக்கம்

நாகர்கோவில், நவ.29 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கன்னியாகுமரி மாவட்ட 24  ஆவது மாநாடு நவ.30 (சனிக் கிழமை) நாகர்கோவிலில் நற்றமிழ்  திருமண மண்டபத்தில் துவங்கு கிறது. கட்சியின் மத்தியக்குழு உறுப் பினர் விஜு கிருஷ்ணன் பங்கேற்கும்  பொதுக்கூட்டத்துடன் ஞாயிறன்று மாநாடு நிறைவடைய உள்ளது. மாவட்ட மாநாட்டையொட்டி நாகர்கோவில் மாநகர் முழுவதும் செம்மயமாக காட்சியளிக்கிறது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாநாட்டை முன்னறி விக்கும் பதாகைகளும் கொடிகளும்  கட்டப்பட்டுள்ளன. மாநாட்டில் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.நூர்முகமது, கே.கனக ராஜ், மாநிலக்குழு உறுப்பினர் கே. ஜி.பாஸ்கரன் பங்கேற்க உள்ளனர். மாவட்டம் தழுவிய அளவில் குழித்துறை, பனச்சமூடு, கொல் லங்கோடு என மும்முனைகளில் இருந்து கொடி, கயிறு, கொடி மரம் கொண்டு வரப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் கட்சியினரும் பொதுமக்க ளும் இப்பயணக் குழுக்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பயணக்குழு தலைவர்களுக்கு நோட்டு மாலைகள் அணிவிக்கப் பட்டன. கொடி பயணம் மாநாட்டில் ஏற்ற வேண்டிய கொடி, குழித்துறையில் இருந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. அனந்தசேகர் தலைமையில் கொண்டு வரப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் கொடிப் பயணத்தை  துவக்கி வைத்தார். வெட்டுமணி, மார்த்தாண்டம், காப்புக்காடு, அழ கிய மண்டபம், தக்கலை, இரணி யல், பரசேரி, வில்லுக்குறி, சுங்கான் கடை, பார்வதிபுரம் வழியாக மாநாட்டுத் திடலை வந்தடைந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன் பெற்றுக் கொண்டார். கொடி மரம் பனச்சமூடில் இருந்து மாநாட்டுக் கொடி மரம் மாநாட்டுத் திடலுக்கு கொண்டு வரப்பட்டது. கொடிமரப் பயணத்துக்கு கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.ஆர்.சேகர் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.லீமாறோஸ் பயணத்தை துவக்கி வைத்தார். மேல்புறம், அரு மனை, களியல், குலசேகரம், பொன்மனை, தடிக்காரன்கோணம், திட்டுவிளை, ஆரல்வாய்மொழி, வடசேரி வழியாக மாநாட்டுத் திடலை வந்தடைந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.உஷாபாசி கொடிமரத்தை பெற்றுக் கொண்டார். கொடி கயிறு கொல்லங்கோட்டிலிருந்து மாவட்ட செயற்குழு உறுப்பி னர் விஜயமோகனன் தலைமையில்  கொடி கயிறு எடுத்து வரப்பட்டது. மாவட்டச் செயலாளர் ஆர்.செல்ல சுவாமி எடுத்துக் கொடுத்து பய ணத்தை துவக்கி வைத்தார். சூழால், அடைக்காகுழி, நித்திரவிளை, சின்னதுரை, புதுக்கடை, தேங்காப் பட்டணம், கருங்கல், குளச்சல்,  மணவாளக்குறிச்சி, இராஜாக்க மங்கலம், ஈத்தாமொழி வழியாக மாநாட்டுத் திடலை வந்தடைந்தது. மாவட்டக் குழு உறுப்பினர் கே.தங்கமோகன் கொடிக்கயிறை பெற்றுக் கொண்டார். மாநாடு - பொதுக்கூட்டம் சனிக்கிழமை (நவ.30) கொடி ஏற்றத்துடன் மாநாடு துவங்கு கிறது. இரண்டு நாட்கள் நடக்கும்  மாநாட்டின் நிறைவாக டிசம்பர் 1 ஞாயிறன்று மாலை 5 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளை யாட்டரங்கம் முன்பு மாவட்டச் செய லாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை யில் பொதுக்கூட்டம் நடைபெறு கிறது. இதில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் விஜு கிருஷ்ணன் மற்றும் மாநில, மாவட்டத் தலை வர்கள் பேசுகின்றனர்.