திண்டுக்கல், நவ.22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட மாநாடு வெள்ளியன்று எழுச்சியுடன் துவங்கியது. திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள டி.எஸ்.எல் மஹாலில் நவ.22, 23 ஆகிய தேதி களில் மாவட்ட மாநாடு நடைபெறுகிறது. வெள்ளியன்று மறைந்த தோழர் என்.சங்கரய்யா நினைவரங்கத்தில் மாநாடு துவங்கி யது. முன்னதாக குடகனாறு இல்லம் முன்பு நடைபெற்ற மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கலந்து கொண்டு பிரதிநிதிகள் ஊர்வலத்தையும் செந்தொண்டர் ஊர்வலத்தை யும் துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து கொண்டு வரப்பட்ட தியாகிகள் ஜோதி, கொடி மரம், கொடி, கொடி கயிறு ஆகியவற்றை தலை வர்கள் பெற்றுக் கொண்டனர். தோழர் பி.ஏ. கருப்பணன் நினைவு கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வசந்தாமணி எடுத்துக் கொடுக்க, மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். நாகப்பன் நினைவு கொடிக் கம்பத்தை பிரபா கரன் எடுத்துக் கொடுக்க, மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பெற்றுக் கொண்டார். அறம் வளர்த்த நாதன் நினைவுக் கொடிகயிறை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜாய் கோஸ் எடுத்து கொடுக்க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன் பெற்றுக் கொண்டார். முனியப்பன் நினைவு ஜோதியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முத்துசாமி எடுத்துக் கொடுக்க, மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி பெற்றுக் கொண்டார். தியாகிகள் நினைவுச் சுடரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.கணேசன் எடுத்துக் கொடுக்க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ஆஸாத் பெற்றுக் கொண்டார். ஜோசப் நினைவு ஜோதியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அருள்செல்வன் எடுத்துக் கொடுக்க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வ.ராஜமாணிக்கம் பெற்றுக் கொண்டார். விவசாயிகள் நினைவு ஜோதியை மாவட்ட குழு உறுப்பினர் என்.பெருமாள் எடுத்துக் கொடுக்க, மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.ராமசாமி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ராணி தொகுத்து வழங்கினார். பேரணி மாநாட்டு திடலை அடைந்த பின்னர், அங்கு நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தோழர் எம்.கருணாகரன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். தியாகி களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு மாநாட்டில் தலைமை குழு தேர்வு செய்யப்பட் டது. வ.ராஜமாணிக்கம், கே.ஆர்.பாலாஜி, ஜெயந்தி ஆகியோர் தலைமைக்குழு உறுப்பி னர்களாக தேர்வு செய்யப்பட்டனர். வரவேற்புக் குழு தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஆர்.சச்சிதானந்தம் மாநாட் டுப் பிரதிநிதிகளை வரவேற்று பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர். கணேசன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் பி.செல்வராஜ் சமர்பித்தார். மாநாடு சனிக்கிழமையும் நடைபெறுகிறது.