கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கோரிக்கை
திருநெல்வேலி, ஜூலை 10- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கோரி நெல்லையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.வியா ழக்கிழமை ஒரே நாளில் 110 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை நெல்லையில் 1409 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள னர்.ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்பு 100 ஐ கடந்துவரும் நிலையில் சிகிச்சை அளித்திடும் ஏற்பாடுகளை விரிவு படுத்து வது உடனடி தேவையாகிறது. தற்சமயம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை, அரசு சித்தா கல்லூரி மருத்துவமனை மற்றும் மூன்று தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை அளித்து வருகின்றன.
வியாழன் வரை 65 பேர் சிகிச்சையில் உள்ளதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட் டுள்ளது. நாள் தோறும் தொற்று அதிகரித்து வரும் சூழலில் தற்போதுள்ள ஏற்பாடு வரும் காலத்தில் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே மாவட்ட நிர்வாகம் சிகிச்சை அளிக் கும் மருத்துவமனைகளை அதிகப்படுத்திட நெல்லையில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் அரசு சார்பில் சிகிச்சை அளித்தி டும் ஏற்பாடுகளை விரிவுபடுத்திட வேண்டும். தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளி களுக்கு உரிய சிகிச்சை, உணவு ஏற்பாடு போதுமானதாக இல்லை என்றும் தக வல்கள் தெரிவிக்கின்றன. மிகக்கொடிய உயிர் பறிக்கும் நோயான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல தரமான சிகிச்சையும், போதிய உணவும் வழங்குவது இன்றியமையாததாகும். மேலும் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை தனிமைப்படுத்திட மாவட்ட நிர்வாகம் நெல்லையில் உள்ள கல்லூரி களை பயன்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். தற்சமயம் அப்படி அடையாளம் காணப்படுபவர்கள் அவர்களது வீட்டில் தனிமைப் படுத்திக்கொள்ள அறிவுறுத்தப் படுகிறார்கள். தனிமைப்படுத்தும் ஏற்பாடு கள் மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பில் நடந்தால்தான் தொற்று பரவுவதை தடுத்திட முடியும். மேலும் தொற்று பரவுவதை விரை வாக கண்டறிந்திட ஆய்வக வசதிகளை மாநகரில் அதிக இடங்களில் ஏற்படுத்திட வேண்டும். கொரோனா நோய் தொற்றிலி ருந்து மக்களை பாதுகாத்திட கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக் கிழமை காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா ளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமை தாங்கினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன்,எம்.சுடலைராஜ், பாளை தாலுகா செயலாளர் பா.வரகுணன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ். பெருமாள் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் ஈஸ்வரமூர்த்தி, கருணா, துரை ,சுரேஷ் மற்றும் முரு கையா ,பேரின்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட நிர்வா கத்திடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட் டது.