சென்னை, பிப். 5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: தமிழ் உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடிய பாடகர், பத்ம பூஷன் வாணி ஜெயராம் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனை தருகிறது. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். பல லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்ற அவரின் குரல் என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்கும். அவரது இழப்பால் வாடும் உறவினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எங்கள் அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.