tamilnadu

img

மோடி அரசை அம்பலப்படுத்தி சிபிஎம் பிரச்சாரம் துவங்கியது

விலைவாசி உயர்வு, வேலையின்மை தீவிரம் ஆகியவற்றிற்கு காரணமான மோடி அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செப்டம்பர் 1 முதல் 7 வரை நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை வெள்ளியன்று துவக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சார இயக்கம் துவங்கியுள்ளது. இதன் நிறைவாக செப்டம்பர் 7 அன்று மாபெரும் மறியல் போர் நடைபெறுகிறது. இப்பிரச்சார இயக்கத்தின் நோக்கங்களை விளக்கி தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மக்களை சந்தித்தார். கரந்தையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மூத்த தலைவர்  என்.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.