tamilnadu

img

விலை உயர்வை கண்டித்து போராட்டம் சிபிஎம் ஆந்திர மாநிலச் செயலாளர் வி.சீனிவாசராவ் கைது

அனந்தபூர்,(ஆந்திரா) மே 31- விலைவாசி உயர்வைக் கண்டித்து அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடு பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் வி. சீனிவாச ராவ், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஜாஃபர் ஆகியோரை காவல்துறை கைது செய்தது. போராட்டம் குறித்து செய்தியாளர் களிடம் பேசிய சீனிவாச ராவ், ஜாஃபர் ஆகியோர் நரேந்திர மோடி அரசால் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. ஒன்றிய அரசு பட்டியலின மக்களைப் பற்றி கவலைப்படவில்லை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிக வருமானம் ஈட்டித் தரவே உதவுகிறது.  பெட்ரோலியப் பொருட்கள் மீதான வாட் வரியை மாநில அரசு குறைத்து, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் விலையை விட லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ. 12 வரை உள்ள பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டுமென்ற னர். முன்னதாக சிபிஐ மாவட்டச் செயலாளர் ஜாஃபர், பர்தா அணிந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே துண்டுப் பிரசுரங்களை விநியோ கித்துக் கொண்டிருந்தார். ஜாஃபர் ஆட்சி யர் அலுவலகத்தின் பிரதான வாயி லுக்கு அருகில் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த போது, ​​பெண் காவலர்கள்அவரைக் கைது செய்தனர். அவரை வேனில் ஏற்றிய பிறகு தான் அவர் சிபிஐ-யின் மாவட்டச் செயலாளர் என்று காவல்துறைக்குத் தெரியவந்தது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் விலைவாசி உயர்வைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் ஒருவர் காவல்துறை தடுப்பைத் தாண்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னேறிச் செல்ல முயன்றார்.