ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கான உயர் நிலை விழிப்பு ணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அண்மையில் சென்னை தலைமைச் செயல கத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றகுழுத் தலைவர் நாகை மாலி, உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினரும் கந்தர்வ கோட்டை தொகுதி உறுப்பினருமான எம்.சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் எம்.சின்னதுரை ஆற்றிய உரை யின் பகுதிகள்:
சமூக நீதியின் முன்னணி மாநிலமாக தமிழ் நாடு திகழ்கிறது. சமூகநீதி பாரம்பரியத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல ‘‘வைக்கம்’’ நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு மற்றும் கேரள முதலமைச்சர்கள் கலந்து கொண்டது பாராட்டத்தக்கது. இந்த நிகழ்வு இந்தியா வையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக் கான விழிப்புணர்வு மற்றும் உயர்நிலைக் கண்காணிப்பு குழு கூட்டத்தை உயிர்ப்புடன் அடிக்கடி நடத்தி, தமிழ்நாட்டில் நிலவும் பல் வேறு நிகழ்வுகளை கண்டறிந்து தீர்வு காணக்கூடிய முறையில் நமது முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருவது வர வேற்கத்தக்கது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். ரூ.100 கோடியில் நவீன விடுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக் கான துணைத் திட்டத்தை செயல்படுத்த சிறப்பு திட்டம், கல்லூரியில் பயிலும் மாண வர்களுக்கு ரூ.100 கோடியில் நவீன விடுதிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்.
ரூ.200 கோடியில் குடியிருப்புகள்
வசிக்கும் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதி களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்வ தற்காக ஆண்டிற்கு ரூ.200 கோடியில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம், அம்பேத்கர் நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கல் வரவேற்கத்தக்கதாகும். வேங்கைவயல் தலை குனிவு! புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வ கோட்டை தொகுதிக்கு உட்பட்ட வேங்கை வயல் கிராமத்தில் குடிதண்ணீரில் மலத்தைக் கலந்து மனித குலத்திற்கே பெரும் இழிவை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு குறித்து சட்ட மன்றத்தில் கவன எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த போது, பதில் அளித்து பேசிய முதலமைச் சர் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். காவல்துறையும் முறையாக விசாரணை செய்து வந்தாலும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது வேதனை யளிக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும்.
எட்டாக்கனியாக மருத்துவப் படிப்பு!
ஆதி திராவிடர் பள்ளிகள் அனைத்தும் பள் ளிக்கல்வித்துறையோடு 2023-24 ஆம் ஆண்டுகளில் இணைக்கப்படும் என்பதை பாராட்டுகிறோம். ஆனாலும், தற்போது உள்ள சலுகைகள், பலன்கள் எந்த வகையிலும் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு பாதிக்கப்படக் கூடாது. அதற்கு தகுந்தாற்போல் விதிமுறை களை உருவாக்க வேண்டும். ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி களில் பயின்ற மாணவர்களில் ஒருவர் கூட நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதனால், மருத்துவப் படிப்பில் சேரவில்லை. இதனை கணக்கில் கொண்டு இந்த மாண வர்களின் மருத்துவப் படிப்பிற்கு அரசு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.2.5 லட்சம் என்பதை 10 லட்சமாக ரூபா யாக உயர்த்த வேண்டும்.
நிலம் வழங்க வேண்டும்
அனைத்து மாவட்டங்களிலும் தனி நீதி மன்றம் அமைத்து வழக்குகளை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதிலும் குறிப்பாக, 15 மாவட்டங்களில் தனி சிறப்பு நீதி மன்றங்கள் அமைக்க வேண்டும். (சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, அரியலூர், கரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தென்காசி). வேலை வாய்ப்புக்கான வசதி களை உருவாக்க வேண்டும். கிராமப்புற மாணவர்கள் கல்வி பெறு வதில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட வேண்டும். ஆதி திரா விடர் மக்களுக்கு நிலம் வாங்கித் தருவதற்காக உள்ள திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்
நல வாரியங்களுக்கு கூடுதல் நிதி!
புதிரை வண்ணார், பழங்குடியினர் நல வாரியங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் இந்த நல வாரியங்களை முறையாக செயல் படுத்த வேண்டும்.
சாதி அடையாளத்தை மாற்றுக!
இந்து பறையன், சண்டாளா என்ற சொல்லை மாற்ற வேண்டும். இதுகுறித்து பிர தமரிடம் தாங்கள் நேரில் வலியுறுத்தியது பாராட்டத்தக்கது. சாதி அடையாளங்களுடன் உள்ள கிராம பெயர்களை மாற்ற வேண்டும்.
பின்னடைவு காலிப் பணியிடங்கள்
பழுதடைந்துள்ள அரசு தொகுப்பு வீடு களை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும். சிதிலமடைந்த குடியிருப்புகளை புனரமைப்பதற்கு தலா ஒரு வீட்டிற்கு 6 லட்ச ரூபாய் அரசு வழங்க வேண்டும். தாட்கோ, வருவாய்த்துறை, பள்ளிக்கல் வித் துறை மற்றும் அரசுத் துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இட ஒதுக்கீடு
1971 ஆம் ஆண்டில் கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோதுதான் 16 விழுக் காடு இட ஒதுக்கீடு என்பது 18 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. அதில், 1990 ஆம் ஆண் டில், பழங்குடியினருக்கு ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்பட்டது. ஆனால், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெ டுப்பின்படி ஆதி திராவிடர் மக்களின் எண் ணிக்கை தமிழ்நாட்டில் 20.01 விழுக்காடாக அதி கரித்துள்ளது. இதனை கவனத்தில் கொண்டு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண் டும்.
தனிச் சட்டம் இயற்றுக!
சாதி ஆணவக் கொலையை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். பண்ணையடிமைகளாய், சாணிப்பால் சவுக்கடிக்குட்பட்ட விவசாயக் கூலிகளான தலித் சமூகத்தை தலைநிமிர் செய்து, தனது இறுதி காலம் முழுவதும் உழைக்கும் அடித் தட்டு மக்களுக்காக போராடிய தியாகி பி. சீனிவாசராவ் 22.9.1961 அன்று மரணமடைந் தார். அவரது நினைவை போற்றும் வகை யில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டியில் தமிழ்நாடு அரசின் சார்பில் 14.11. 2009 அன்று நினைவு மண்டபம் திறக்கப் பட்டது. தற்போது, அந்த நினைவு மண்டபம் பழுதடைந்துள்ளது. எனவே அதனை புதுப் பொலிவுடன் புனரமைத்து, அதில் தியாகி சீனி வாசராவ் முழு உருவ சிலையை அமைக்க வேண்டும். அவரது பிறந்த நாளான ஏப்ரல் 10 அன்று அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
விவசாயக் கூலிகளுக்கு தனித்துறை!
விவசாயக் கூலி தொழிலாளர்களின் அடிப் படை ஆதாரம் என்பது அவர்கள் உழைப்புக்கு வழங்கப்படும் ஊதியமே ஆகும். தலித் மக்களின் வாழ்வாதாரம் என்பது விவசா யக்கூலி மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச கூலிச் சட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்திட வேண்டும். விவசாயக் கூலி தொழிலாளர் களுக்கு என்று தனித்துறை என்ற லட்சியத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்.
அதிகரிக்கும் சிறார் குற்றங்கள்
கடந்த 2021 ஆம் ஆண்டில் 166 சிறார் பாலியல் குற்றங்கள் பதிவாயின. அடுத்த ஆண் டில் இந்த குற்றத்தின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்தது. 2023 ஆம் ஆண்டில் இரண்டு மாதத்தில் மட்டும் குற்றங்களின் எண்ணிக்கை 27 ஆக பதிவாகியுள்ளது. எனவே, இந்த குற்றங்களை தடுப்பதற்கு சிறப்பு பிரிவுகள் ஏற்படுத்த வேண்டும். கடந்த மூன்று ஆண்டு களாக 374 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவைகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பட்டியலின மக்க ளுக்கு 100 நாட்கள் வேலை என்பதை அதி கரிக்க வேண்டும். கூலி நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.