திருப்பூர், நவ. 22 - தியாகி ரத்தினசாமியின் 57ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு மாநகர குழுவின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வடக்கு மாநகரச் செயலாளர் விவேக் தலைமை ஏற்றார். அதைத் தொடர்ந்து இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே. கணேசன் மற்றும் வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செ.மணிகண்டன் ஆகியோர் ரத்தின சாமியின் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து மாவட்ட தலைவர் எஸ். அருள், வடக்கு மாநகர குழு உறுப்பினர் சந்துரு ஆகியோர் ரத்தினசாமியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இறுதியாக இடுவாய் ஊராட்சி மன்றத்தின் தலைவர் கே. கணேசன் நிகழ்வை நிறைவு செய்து பேசினார். இறுதியாக இடுவாய் வாலிபர் சங்க கிளையின் தலைவர் கௌதம் நன்றி உரையாற்றினார். இந்த நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலா ளர் வீ.பாலசுப்ரமணியம், மாவட்ட துணை தலைவர் டி.உமா சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.சிந்தன், பிரவீன் மற் றும் வடக்கு மாநகர குழு உறுப்பினர்கள் மனோஜ், பிர னேஷ் இடுவாய் பகுதி வாலிபர் சங்கத்தினர் திரளாக இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.