tamilnadu

img

15 நாளில் சரணடைய ஜெயப்பிரதாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை,அக்.20- திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இ.எஸ்.ஐ. தொகையை செலுத்தாதது தொடர்பான வழக்கில்  ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ெஜயப்பிரதா, 15  நாட்களில் நீதிமன்றத்தில் சரண டைந்து, 20 லட்சம் ரூபாய் டெபாசிட்  செய்ய வேண்டும் என சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயப்பிரதா சென்னையைச் சேர்ந்த ராம்குமார், ராஜ்பாபு ஆகி யோருடன் சேர்ந்து, அண்ணா சாலை  அருகில் ஜெயப்பிரதா என்கிற திரை யரங்கை நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை, தொழிலாளர் அரசு  காப்பீட்டு கழகத்தில் செலுத்த வில்லை என எழும்பூர் நீதிமன்றத் தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஆகஸ்டில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப் பிரதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், தண்ட னையை நிறுத்தி வைக்க மறுத்த  முதன்மை அமர்வு கோர்ட் உத்த ரவை ரத்து செய்ய மறுத்ததுடன், 15 நாட்களில் சம்பந்தப்பட்ட நீதி மன்றத்தில் சரணடைந்து, இ.எஸ். ஐ.க்கு செலுத்த வேண்டிய 20 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என ெஜயப்பிரதா உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.