கோவை, பிப். 28- காட்டன் கார்ப்பரேசன் இந்தியா என்கிற அமைப்பு ஒன்றிய அரசு வைத்திருப்பதைப்போல, காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு உருவாக்கப்பட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். மார்ச் 5 ஆம்தேதி கோவை காளப் பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட் டோரியத்தில் தொழில் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட் டில், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கேரள தொழிற்துறை அமைச்சர் பி.ராஜிவ் மற்றும் தொழில்முனைவோர் அமைப்பி னர் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டின் நோக்கங்கள் குறித்து கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மூத்த தொழில்முனைவோர் டி.பால சுந்தரம் ஆகியோர் கோயம்புத்தூர் பத்தி ரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் களை சந்தித்தனர்.
அப்போது, பி.ஆர்.நடராஜன் எம்பி., பேசுகையில், ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்கள், இத்தொழிலை நம்பி யுள்ள லட்சக்கணக்கான ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு தொழில் பாதுகாப்பு மாநாடு கோவையில் நடை பெற உள்ளது. இம்மாநாட்டில், மிக முக்கியமாக விவாதிக்கப்பட உள்ள அம்சங்களில், நூற்பாலைகளுக்கு தேவையான மூலப்பொருளான பஞ்சு விலை நிலையற்றதாக உள்ளது. இத னால், ஏற்றுமதிக்கான ஆர்டரை பெறு பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்ற னர். ஆகவே, குறிப்பிட்ட 4 மாத காலத் திற்காவது, நிர்ணயிக்கும் விலைகள் நிலையானதாக, கட்டுக்குள் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். காட்டன் கார்ப்பரேசன் இந்தியா அமைப்பை ஒன்றிய அரசு வலுப்படுத்த வேண்டும். அதேபோல, தமிழ்நாடு அரசு நெல் கொள்முல் செய்து இருப்பு வைத்து விநியோகிப்பதைப்போல், பருத்தி அறுவடை காலத்தில் பஞ்சை கொள்முதல் செய்து இருப்பு வைத்து பற்றாக்குறை காலத்தில் விநியோகம் செய்ய வேண்டும். அதற்காக காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு உருவாக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசு பஞ்சு இறக்கு மதி வரியை ரத்துசெய்யவேண்டும். சிறு, குறு தொழில்களுக்கு தனி அமைச்சகம்
இதேபோல, வார்ப்படம், மோட்டார் பம்ப் போன்ற தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க வேண் டும். மேலும், குறு,சிறு தொழில்க ளுக்கு மின்சார பற்றாக்குறை ஏற்படா மல் இருக்க அரசு தனி கவனம் மேற் கொள்ள வேண்டும். கோடிக்கணக் கான ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிற குறு,சிறு தொழில்களுக்கென தனி அமைச்ச கம், தனி அமைச்சரை நியமிக்க வேண்டும். இதேபோன்று தென்னை விவசாயத்தை செழிக்கவைத்திட, பாமாயில் இறக்குமதியை மாநில அரசு நிறுத்திவிட்டு, தேங்காய் எண் ணெய்யை அனைத்து நியாய விலைக்கடைகளிலும் வழங்க வேண்டும். விசைத்தறி தொழில்களை பாதுகாக்க மானிய மின்சாரம் 1500 யூனிட்டுகளாக அதிகரிக்கப்பட வேண்டும்.
மேலும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் களுடன் போடப்படும் ஒப்பந்தங்கள் சட்டரீதியான ஒப்பந்தமாக மாற்றப் பட வேண்டும். குறிப்பாக, குறு,சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங் கப்படும் வங்கிக்கடன், இதனை யொட்டிய என்பிஏ 90 நாட்கள் என் பதை 180 நாட்களாக அதிகரித்திட வேண்டும். ஜாப் ஆர்டர்களுக்கான ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட உள்ளது. இதனை மாநில, ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக மூத்த தொழில்முனை வோர் டி.பாலசுந்தரம் பேசுகையில், கொரோனா தொற்றுக்கு பிறகு தொழில் நிலை மாறும் என நினைத் தோம், ஆனால், அப்படியான எந்த மாற்றமும் நிகழவில்லை. ஆர்டர்கள் இல்லை, ஜிஎஸ்டி பிரச்சனை, நிதிப் பிரச்சனை தற்போது மூலப் பொருள் விலை உயர்வு என குறு,சிறு தொழில் கள் பெரும் சவாலை எதிர்கொண்டு இருக்கிறது.
ஒன்றிய அரசின் கணக்கின்படியே குறு,சிறு தொழில்கள் 49 லட்சம் தொழில்களும், இதில், 99 லட்சம் தொழிலாளர்களும் வேலை செய் கின்றனர். இதில், 50சதவிகிதம் கிரா மப்புறங்களில் இந்த தொழில்கள் உள்ளது. இதில், 33 சதவீதம் பெண் கள் பணிபுரிகின்றனர். 16 சதவிகிதம் பேர் பட்டியலினத்தவர்கள். நாட்டின் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) சுமார் 33 சதவிகிதம் இந்த சிறு குறு தொழில்கள் பங்களிப்பை செய்கி றது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த குறு,சிறு தொழில்கள் இப்போது பெரும் சிரமத்தை சந் தித்து வருகிறது. குறிப்பாக தொழிலாளர்கள் பற்றாக்குறையை சரி செய்திட வேண்டும். தொழிலாளர்களுக்கு தங்குமிடங்கள், சுகாதார வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அதற் கான சிறப்பு திட்டங்களை அரசு உரு வாக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரும் தொழில்கள் குறு, சிறு தொழில்களுக்கு ஜாப் ஆர் டர்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நான்கு ஆண்டுகளாக ஜிஎஸ்டி பிரச்சனை தீர்க்கப்படாமலே உள் ளது. இதனை சரி செய்ய வேண்டும். இதுபோன்ற முக்கியமான அம்சங் கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவே இந்த மாநாடு நடைபெற உள்ளது என்றார். முன்னதாக இந்த பத்திரிகை யாளர் சந்திப்பில், கோயம்புத்தூர் எம்எஸ்எம்இ அசோசியேசன் தலைவர் தி.மணி, செயலாளர் கே. பாண்டியன், பொருளாளர் ஏ.விஸ்வ நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.