சிகிச்சையில் 23 பேர்
தென்காசி, ஜூன் 12- தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக் கை 111 ஆகவும், குணமா னோர் எண்ணிக்கை 88 ஆக வும் உயர்ந்துள்ளது. 23 பேர் மருத்துவமனையில் சிகிச் சை பெற்று வருகின்றனர். தென்காசி மாவட் டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 107 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 1768 பேர், சென்னை நீங்கலாக வெளி மாவட் டங்களில் இருந்து வந்த 1779 பேர், சென்னையில் இருந்து வந்த 1883 பேர் என மொத்தம் 5537 பேர் வெளியிடங்களில் இருந்து வந்துள்ளனர். இவர்களில் 5254 பேர் வீடு களில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அரசு கோவிட்-19 மையங்களில் 283 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் இதுவரை 8869 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வெள்ளி யன்று மட்டும் 389 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்க ளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இவர்கள் 5 பேரும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். குறிப் பாக சென்னையில் இருந்து வந்தவர்கள். தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொ ரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
அதே வேளையில் குண மாகி வீடுகளுக்கு அனுப்பப் பட்டோர் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது. 23 பேர் மட்டும் அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். தொற்றால் பாதிக் கப்பட்டோர் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு சுகா தாரப் பணிகள் தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளை வரு வாய்த்துறையினர், சுகாதா ரத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இப்பகுதிகளில் வசிப்ப வர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். அவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பிற பகு திகளில் இருந்தும் இப்பகுதி களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.