tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதி கரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக  அரசு மற்றும் சுகாதாரத்  துறை தீவிர நடவடிக்கை களை மேற்கொண்டு வரு கிறது. இந்நிலையில், பொதுஇடங்களில் பொது மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும் என்று சுகா தாரத்துறை வேண்டு கோள் விடுத்துள்ளது. 

ஜம்முவில் பெய்த கன மழையால் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ஒரு  பெரிய நிலச்சரிவு ஏற்பட்  டது. இதனால் சாலை யின் 100 முதல் 125 மீட்  டர் பகுதி சேதமடைந்தது. மேலும் மோர் சுரங்க பபாதை மற்றும் பேட்டரி சாஷ்மா அருகே சாலை  மூடப்பட்டது. அங்கு மறு சீரமைப்பு பணிகள் நடை பெற்று வருகின்றன. 

பெங்களூரில் உள்ள ஸ்ரீ  கிருஷ்ணதேவராயா கல்வி நிறுவனம், ரேவா  பல்கலைக்கழகம் மற்றும்  திவ்யஸ்ரீ கல்வி நிறுவ னம் மற்றும் பல நிறுவ னங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் கார்ப்ப ரேட் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என இரண்டு இடங்களில் சோதனை நடத்தப்பட் டது. இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவர்  களிடம் அதிகளவில் கட்ட ணம் வசூலிப்பதாகவும், இருக்கைகளை முடக்குவ தாகவும், வரி ஏய்ப்பு செய்  வதாகவும் புகார் எழுந்  ததை அடுத்து இந்த  சோதனை நடத்தப்பட்டது.

தில்லியில் கடந்த குளிர் காலத்தின் போது கடுமை யான காற்று மாசு ஏற் பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பள்ளி,  கல்லூரிகள், தொழிற்  சாலைகள், அலுவலகங் கள் மாதக் கணக்கில் மூடப் பட்டன. நிகழ்வாண்டு குளிர் காலத்தின்போது ஏற்படும் காற்று மாசு சூழலை தடுக்க அக்டோ பர் 1 முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 28 வரை நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் தில்லிக்குள் நுழைய தடை விதிக் கப்பட்டுள்ளது.

கடலூர் எம்.புதூரில் வாணவேடிக்கை பட்டாசு தயாரிக்கும் கொட்டகை யில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்  தில் சிக்கி 3 பேர் பலியா னதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 2 பேர்  படுகாயத்துடன் சிகிச்  சைக்காக மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.

கோவை சுண்டக்காமுத் தூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார், லட்சுமி பிரியா தம்பதியரின் மகள் யாழினி (4) ஒரு நிமிடத் தில் ஹூலா ஹூப் எனும் சாகச வளையத்தை 160 முறை கால் பாதத்தில்  சுற்றி உலக சாதனை புத்த கத்தில் இடம் பிடித்துள்ளார். 

மத்தியப் பிரதேசம் மாநி லம் இந்தூரில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் காண்ட்வா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்  தில் 5 பேர் உயிரிழந்தனர்.