வேலூர், ஜன.10- தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் வேலூரில் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரு கிறது. பொது மக்களைக் கடந்து முன்களப் பணியில் இருப்பவர்களும் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்ற னர். வேலூரில் கொரோனா 3 ஆவது அலை காரண மாக முன் களப்பணியாளர்கள் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வேலூர் சட்ட மன்ற உறுப்பினர் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப் பட்டுள்ளது. இதனையடுத்து வேலூர் வேலப் பாடியில் உள்ள தனது வீட்டில் தனிமை ப்படுத்திக் கொண்டு உள்ளார். ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டு முதல் அலை யின் போதே கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனை யில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய பின் 2 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டார். இதேபோல் வேலூர் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கோட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி மூலம் அலுவலகம் தூய்மை ப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருநாவுக்கரசர் எம்பி காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கர சருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண் டுள்ளார். கடந்த 2 நாட்களாக தன்னை சந்தித்தவர்கள் மற்றும் என்னோடு தொடர் பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோ தனை மேற்கொள்ளுமாறு அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருநாவுக்கரசரின் மகனும், அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.