tamilnadu

நெல்லை மாவட்டத்தில் 188 பேருக்கு கொரோனா

திருநெல்வேலி, ஜன.15- நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளி யன்று ஒரே நாளில் மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேர் கொரோ னாவுக்கு உயிரிழந்துள்ளனர். தொடர் பண்டிகை காரண மாக நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதால் அரசு  மருத்துவமனையில் படுக்கை கள் வேகமாக நிரம்பி வரு கின்றன. மாவட்ட மற்றும் மாநக ராட்சி நிர்வாகங்கள் சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் சனிக்கிழமையன்று வெளியான பரிசோதனை முடிவில் 188 பேருக்கு தொற்று பாதிப்பு கண்ட றியப்பட்டு உள்ளது. இதில் மாநகர பகுதியில் மட்டும் 110 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதவிர ராதாபுரத்தில் 22 பேருக்கும், வள்ளியூரில் 20 பேருக்கும், பாளையில் 13 பேருக் கும், மானூரில் 9 பேருக்கும், அம்பையில் 7 பேருக்கும், நாங்குநேரி, சேரன்மகாதேவி, களக்காட்டில் தலா 2 பேருக் கும், பாப்பாக்குடியில் ஒருவருக் கும் தொற்று உறுதி செய்யப் பட்டு உள்ளது. தொற்று பாதித்த வர்கள் நெல்லை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப் பட்டவர்களில் மருத்துவர்கள், காவல்துறையினரும் அடங்கு வர்.  வெள்ளியன்று ஒரே நாளில் நெல்லையில் கொரோனாவுக்கு பெண் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். சேரன்மகாதேவி மற்றும் தேவர்குளத்தை சேர்ந்த 2 ஆண்கள், பாளை கே.டி.சி . நகரை சேர்ந்த பெண் ஆகியோர் இறந்துள்ளனர். மாநகர பகுதி யில் அதிக அளவு பாதிப்பு இருப்ப தால் நிலவேம்பு குடிநீர் வழங்கு தல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளது.

மேலும் பேருந்து நிலையத் திற்கு வரும் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகி றது. இந்த பணிகளை கமிஷ னர் விஷ்ணு சந்திரன் உத்தர வின்பேரில் சுகாதாரத்துறை யினர் செய்து வருகின்றனர். தச்சை மண்டலத்திற்கு உட்பட்ட வெள்ளக்கோவில், வண் ணார்பேட்டை உள்ளிட்ட இடங்க ளில் தொற்றுபாதித்தவர்களின் வீடுகள் மற்றும் அந்த தெருக்க ளில் சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டது.