தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் அனைத்துத் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி,ஜூலை 3- கொரோனா நோய் பரவல் தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலா ளர் குடும்பங்களுக்கு மாதம் தலா, 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இயல்பு நிலை திரும்பும் வரை தொழிலாளருக்கு, உணவு பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு பணி யில் ஈடுபடும் மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர், துப்புரவு பணி யாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள், சாதனங்கள் வழங்க வேண்டும்.டீசல், பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தியும் பொதுத்துறை நிறுவ னங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்தும் ஜூலை 3 தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியூசி, எல்பிஎச், எச்எம்எஸ், ஏஐசிசிடியூ ஆகிய 6 சங்கங்கள் சார்பில் துறைமுகம் குடியி ருப்பு பகுதி, கிரீன் கேட், எல்ஐசி அலு வலகம், பழைய பேருந்து நிலையம், சிவந்தாகுளம் ரோடு, பழைய மாநக ராட்சி, சிதம்பர நகர், தாளமுத்துநகர், மட்டக்கடை உள்ளிட்ட 30 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு சார்பில் துறைமுக சபை உறுப்பினர் ரசல், ஐஎன்டியூசி சார்பில் ராஜ கோபால், எச்எம்எஸ் சார்பில் துறை முகம் சத்யா, ஏஐடிசிசிடியூ சார்பில் சந்திரசேகர், எல்பிஎம் சார்பில் பேச்சி முத்து ஆகியோர் தலைமை வகித்த னர். மாவட்டம் முழுவதும் 300 இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் எஸ். சிவதாணு தாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாத்தான் குளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு அருணாச்சல தலைமை வகித்தார். ஆறுமுகனேரி பள்ளி வாசல் பஜாரில் ஐஎன்டியுசி பி.எஸ்.முருகன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்துல் கலாம் ஆட்டோ ஸ்டாண்ட் பிரையண்ட்நகர் 7 ஆம் தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜி. முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். கட்டபொம்மன் நகர் ஆட்டோ ஸ்டாண்டில் கே .ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
எட்டயபுரத்தில் சிஐடியு ஏஐடியுசி சார்பாக பாரதி மில், பட்டத்துவினா யகர் கோவில் திடல் ,மேலவாசல், பேருந்து நிலையம் ஆகிய நான்கு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு சார்பாக செல்வ குமார், ஏஐடியுசி சார்பாக முனிய சாமி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேம்பார் ஆட்டோ நிறுத்தம் முன்பு சிஐடியு ஆட்டோ சங்க தலைவர் ராஜா தலைமையிலும் விளாத்திகுளம் பழைய தாலுகா அலுவலகம் முன்பு சிஐடியு தாலுகா ஒருங்கிணைப்பாளர் ஜோதி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகலாபுரம் ஆட்டோ நிறுத்தத்தில் வசந்த் தலைமையிலும் புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து சங்க தலை வர் யோகராஜ் தலைமை தாங்கினார்.
திருநெல்வேலி
நெல்லை வண்ணார்பேட்டை போக்குவரத்து கழக அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு தொ.மு.ச மாநில அமைப்பு செய லாளர் அ.தர்மன் தலைமை தாங்கி னார். சிஐடியு அகில இந்தியச் செயலாளர் ஆர். கருமலையான், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பெருமாள், ஆகியோர் பேசினர்.
தென்காசி
தென்காசி நகரம் தினசரி சந்தை அருகில் பீடித்தொழிலாளர் சங்க வட்டார செயலாளர் குருசாமி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் வேல்முரு கன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வெட்டூர்ணிமடம், நாகர்கோவில் தலைமை தபால் நிலையம், குல சேகரம், முள்ளங்கினாவிளை, வேங்கோடு, கருங்கல் உட்பட 500 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.அந்தோணி, ஏஐடியுசி நிர்வாகி இசக்கி முத்து, எச்எம்எஸ் மாநில தலைவர் எம்.சுப்பிரமணிய பிள்ளை, தொமுச மாநில செயலாளர் இளங்கோ, ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், எம்எல்எப் மாவட்ட செயலாளர் விவே கானந்தன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாகர்கோவில் பிஎஸ்என்எல் தொலைபேசி நிலை யம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.