tamilnadu

img

பால பிரஜாபதி அடிகளாரின் பவளவிழா

சனாதன அதர்மத்துக்கு எதிராக போராடிய அய்யா வைகுண்டரை பின்தொடர்ந்து இன்றும் மக்கள் நல முழக்கங்களை முன்னிறுத்தி போராடி வரும் பாலபிரஜாபதி அடிகளார் ஜன.20 வெள்ளியன்று தமது 75ஆவது வயதை எட்டினார். இதையொட்டி குமரி மாவட்டம் சாமித்தோப்பு அன்பு வனத்தில் நடைபெற்ற பவள விழா நிகழ்வில் பங்கேற்று, அடிகளாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் வாழ்த்து தெரிவித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், மூத்த தலைவர் என்.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.