tamilnadu

img

பெண்களின் உழைப்பைச் சுரண்டும் வலதுசாரி அரசுகள்

கோவை, மே 7- பெண்களிடத்தில் மிகப்பெரிய அளவி லான உழைப்புச் சுரண்டலில் வலதுசாரி அரசு கள் செயல்படுவதாக உழைக்கும் பெண்கள்  ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர் தீபா கே. ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்நாடு மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் 10  ஆவது மாநில மாநாடு கோவையில் ஞாயி றன்று நடைபெற்றது. சிங்காநல்லூர் அருகே  உள்ள மசக்காளிபாளையம் ஹர்ஷா மஹா லில், தோழர் ரஞ்சனா நிர்வலா நினைவரங் கத்தில் நடைபெற்றது. முன்னதாக, சங்கத்  தின் கொடியினை மாநில இணை ஒருங்கி ணைப்பாளர் எம்.மாலா ஏற்றி வைத்தார். வர வேற்புக்குழு தலைவர் எம்.கிரிஜா வரவேற்பு ரையாற்றினார். சிஐடியு அகில இந்திய செயலாளரும், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் கன்வீனருமான தீபா கே.ராஜன்  மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றி னார். இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழி யர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், தலைவர் டி.ஜெய்சங்கர், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் எம்.தனலட்சுமி ஆகியோர் வாழ்த்  துரை வழங்கினர்.

மாநாட்டில் தீபா கே.ராஜன் பேசுகையில்,  பெண் தொழிலாளர்கள் சோசலிச அமைப்பு  முறையில்தான், தங்களுடைய கோரிக்கை களை நிறைவேற்ற முடியும் என்கிற அரசியல்  புரிதலோடு, அரசியல் களத்திலும் களமாட  வேண்டிய அவசியம் இருக்கிறது. சிங்கார வேலரின் நூற்றாண்டு விழா மே தின  நிகழ்வு தொழிற்சங்கங்களால் கொண்டாடப்  பட்டு வருகிறது. நம்முடைய அமைப்பு தினத்தை,  மே 2 முதல் 30 ஆம் தேதி வரை கொண்டாட வேண்டும். தேசம் முழுவதும் பாலின சமத்து வமின்மை நிலவுகிறது. பெண்களுக்கு எதி ரான மிகப்பெரிய வன்முறைகளை கட்ட விழ்த்து விடப்படுகிறது. குற்றச் சம்பவங்க ளும் அதிகரித்து வருவது என்பது, பெண்க ளுக்கான பாதுகாப்பை கேள்விக்குறியாக் கும். இதற்கு உடந்தையாக இருப்பது வலது சாரி சிந்தனையாகும். பில்கிஸ் பானு துவங்கி, தற்போது மல்  யுத்த வீராங்கனைகள் வரை ஒன்றிய அரசு  எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நடை பெற்ற குற்றங்களை மூடி மறைக்க முயற்சி செய்வதை நம்மால் கண்கூடாக பார்க்க முடியும். வலதுசாரி சிந்தனையுடைய அரசு கள் குறைவான ஊதியத்தை கொடுத்து, பெண்களிடத்தில் மிகப்பெரிய அளவிலான உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுகின்றன. குறிப்பாக ஒரிசா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மின்சார விநியோகம் தனியார் மயமாகப் பட்டு,

அதனுடைய கட்டண உயர்வுகள் மக்  களை பெரிதும் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளாக்கியுள்ளன. தற்போது கொண்டு வரப்படுகிற மின்சார திருத்தச் சட்டம் என்  பது அனைவரையும் கட்டணச் சுமையை ஏற்கிற வகையில் சிரமங்களை உருவாக்குவ தாக உள்ளது. எனவே, இந்த மின்சார திருத்த  சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். இந்த மாநாடு பெண்களினுடைய கோரிக்கைகளை வலியுறுத்துவதோடு, மின்வாரியம் தனி யாருக்கு விடப்படுவதினால் பெரிதும் பாதிப்புகளுக்கு உள்ளாகிற பல்வேறு குடும்பங்களைச் சார்ந்த பெண்களினுடைய கோரிக்கைகளை பேசுகிற மாநாடாகவும் நடைபெறுகிறது என்றார். இதைத்தொடர்ந்து இம்மாநாட்டில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணியிடங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். பெண்  கள் பணியாற்றும் இடங்களில் குழந்தைகள் காப்பகம், ஓய்வறை அமைக்க வேண்டும். மின்வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப்  பணியிடங்களை உடனடியாக நிரப்ப நட வடிக்கை எடுக்க வேண்டும். உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை  வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் தேர்வு

இம்மாநாட்டில் மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் கன்வீனராக இ.விஜயலட்சுமி மற்றும் துணை கன்வீனர்களாக மாலா, சாலட், டி. கருணாம்பிகை, பி.ஸ்ரீதேவி, கௌரி மீனா,  எஸ்.கலைச்செல்வி, மனோ மங்கையர்க் கரசி, ஷெயன் தேவ கிருபை உள்பட 22 பேர்  கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு அகில இந்திய செயலாளரும், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் அகில இந்திய கன்வீனருமான ஏ.ஆர்.சிந்து நிறைவுரையாற்றினார்.  இம்மாநாட்டில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில இணைச்செயலாளர் டி. மணிகண்டன், மாநில துணைத்தலைவர் ஆர். நாகராஜ், கோவை மண்டலச் செயலாளர் டி. கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வரவேற்புக்குழு செயலாளர் எஸ்.கலைச்செல்வி நன்றி கூறினார்.