tamilnadu

img

இந்தி தெரியாதா? தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேச்சால் சர்ச்சை

புதுச்சேரி, நவ.14- “பிரிட்டிஷ் மொழியான ஆங்கிலம் தெரிகிறது. இந்திய தேசிய மொழியான இந்தி தெரியாதா?”என்று புதுச்சேரி அதிகாரிகளிடம் தேசிய சிறு பான்மையினர் ஆணைய உறுப் பினர் சையத் ஷாஹிசாதி கேட்ட விவகாரம் சர்ச்சையாக மாறி யுள்ளது. புதுச்சேரி யூனியன் பிர தேசத்தில் சிறுபான்மையினர் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுவது பற்றி ஆய்வு செய்ய தேசிய சிறு பான்மையினர் ஆணைய உறுப் பினர் சையத் ஷாஹிசாதி இரண்டு நாள் பயணமாக புது ச்சேரி வந்திருந்தார். நவம்பர் 11ஆம் தேதி புதுச் சேரி தலைமை செயலகத்தில் சையத் ஷாஹிசாதி தலைமை யில் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. இதில், வக்ஃப் வாரிய அமைச்சர், பல்வேறு துறைச் செயலர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் சிறுபான்மையினர் பயன்பெறும் நலத்திட்டங்கள் குறித்து தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேசத் தொடங்கி னார். அவர் அங்கு முழுமை யாக இந்தியில் பேசிக்கொண்டி ருந்தார். அவர் பேசிய இந்தி மொழி அக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் பலருக்கும் புரிய வில்லை.

இதையடுத்து அதிகாரிகள் சிலர் புதுச்சேரியைச் சேர்ந்த அதி காரிகளுக்கு இந்தி தெரியாது, அதனால் இந்தியில் பேசுவது அவர்களுக்குப் புரிந்து கொள்ள முடியாது. ஆகவே ஆங்கிலத்தில் பேச வேண்டு கோள் என்று வைத்ததாகக் கூறப் படுகிறது. அதற்கு “தேசிய மொழியான இந்தி அதிகாரி களுக்குத் தெரியாமல் இருப் பது எப்படி” என்று சையத் ஷா ஹிசாதி கேட்டதாக தகவல் வெளியானது.  தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சையத் ஷாஹிசாதி இந்தி மொழியில் பேசினார். அதை மற்றொரு அதிகாரி மூலம் மற்றவர்களுக்கு மொழி பெயர்ப்பு செய்ததாகக் கூட்டத் தில் பங்கேற்ற அதிகாரிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தக் கூட்டம் முடிந்ததும் தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி அதிகாரிகளிடம் இந்தி தெரியாதது குறித்துப் பேசி யதாகக் கூறப்படும் விஷயம் புதுச்சேரி முழுவதும் பரவத் தொடங்கியது. இதற்குப் புதுச்சேரி சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா. சிவா கடுமையான கண்டனத் தைத் தெரிவித்தார். இந்த விஷயத்தில் ஒன்றிய  அரசு உடனடியாகத் தலை யிட்டு தமிழ் பேசும் அதிகாரிகள் மத்தியில் கலந்து கொண்ட கூட்ட த்தில் இந்தி பேச வற்புறுத்திய தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இனி புதுச்சேரிக்கு வரும் ஒன்றிய அரசின் அமைச்சர்கள், ஆணையர்கள், அதிகாரிகள் தேசிய ஒருங்கிணைப்பு மொழி யான ஆங்கிலமும் புதுச்சேரி அலுவல் மொழியான தமிழும் தெரிந்தவர்களை அனுப்பி வைக்கவேண்டும் வலியுறுத்துகி றேன்,” என்று சட்டமன்ற எதி ர்க்கட்சி தலைவர் சிவா தெரி வித்தார். கருப்புக் கொடி இதனிடையே திட்டச் செயல் பாடுகள் குறித்து சையத் ஷாஹிசாதி விளக்கமளிக்கப் புதுச்சேரி தலைமை செயல கத்தில் செய்தியாளர்கள் சந்தி ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையறிந்த புதுச்சேரி தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழ்த் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப் பினர் ஆணைய உறுப்பினரின் செயலைக் கண்டித்தும் அவ ருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் தலைமை செய லகம் முன்பு ஒன்று திரண்டனர். அப்போது, சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினருக்கு எதி ராகவும் ஆளுநர், முதல்வரைக் கண்டித்தும் கருப்புக் கொடியைக் காட்டி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய சமூக அமைப்பினரைக் காவல் துறையினர் கைது செய்த னர்.