tamilnadu

img

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டும்

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ  தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டும்

தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஏப்.28-  தமிழகம் முழுவதும் குறிப்பாக, பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு மற்றும் திருவோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னையை பாதிக்கும், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ நோயை கட்டுப் படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, தமிழ்நாடு தென்னை விவ சாயிகள் சங்கம், தஞ்சை மாவட்டக் குழு  சார்பில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட் சியர் அலுவலகம் முன்பு திங்கட்கிழமை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் எம்.செல்வம், முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர்.சி. பழனிவேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன், மாவட்டப் பொருளாளர் அரங்கசாமி ஆகி யோர் பேசினர்.  மாவட்ட நிர்வாகிகள் என். சுரேஷ்குமார், எஸ்.கமால் பாட்சா, ஏ.நவீன் ஆனந்த், ஜி.பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். தொடர்ந்து வருவாய் கோட்டாட்சி யரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.