திருச்சிராப்பள்ளி, நவ.6- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் சார்பில் இந்தித் திணிப்பு எதிரிப்பு – மொழியுரிமை பாதுகாப்பு மாநாடு சனிக்கிழமை அன்று திருச்சி கலைஞர் அறி வாலயத்தில் மொழிப்போர் ஈகியர் சின்னச்சாமி நினைவரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமை தாங்கினார். மாநாட்டில் மொழியுரிமைப் போராட்ட வர லாறு என்ற தலைப்பில் நடந்த முதல் அமர்விற்கு மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா தலைமை வகித்து பேசினார். வரலாற்றாளர் செந்தலை ந.கவுதமன் பேசு கையில், 1964ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழிக்காக தமிழ்வாழ்க; இந்தி ஒழிக என ஒற்றை மனிதனாக முழக்கமிட்டு தனது உள் ளத்தில் இருந்த நெருப்பை உடலுக்கு வைத்து கொண்டவர் நமது ஈகியர் திருச்சி கீழப்பழுவூர் சின்னசாமி என்றார்.
திராவிடர் கழக பரப்புரை செயலாளர் அ. அருள்மொழி பேசுகையில், சமஸ்கிருதத்தைத் தான் பேச வேண்டும் என்பதற்கு முன்னோட்ட மாக தான் இந்தியை திணிக்கின்றார்கள் என்பது வரலாற்று செய்தி. புதிய கல்விக்கொள்கையில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த சமஸ்கிருத பயிற் சியை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம். ஒவ்வொரு துறை யிலும் முதலில் இந்தியை கொண்டுவர வேண் டும். அதற்கு முதல்படியாக ஆங்கிலத்தை விரட்டி வெற்றிடத்தை கொண்டு வர முயல்கின்ற னர். தமிழ்நாடு அரசு இந்தி கற்றுக்கொடுப்பதை தனது கொள்கை முடிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என சிலர் பொதுநல வழக்கு தொடுத் துள்ளனர். இதை நாம் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். மொழி – தேசிய மொழிகள் - அலுவல் மொழி என்ற தலைப்பில் நடந்த இரண்டாவது அமர் விற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ச.தமிழ்ச் செல்வன் தலைமை வகித்து பேசுகையில், அரசி யலமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் 22 மொழிகள் இந்தியாவின் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியை இந்தியா முழுவதுமான அலுவல் மொழியாக கொண்டு வருவதற்காக கோடிக்கணக்கில் பணத்தை பாஜக அரசு செலவு செய்கின்றது என்றார்.
அண்ணாமலைக்கு கேள்வி
மூத்த தலைவர் அருணன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் மருதையன் ஆகியோர் பேசி னர். அருணன் பேசுகையில், “நாங்கள்தான் தமி ழைக் காக்க வந்த நவீனக் காவலர்கள் என்கிறார் அண்ணாமலை. தமிழை திமுகவும், திமுக அர சும் ஒழிக்கிறதாம். தமிழ் தெய்வீக மொழியாம். தமிழை இலக்கிய மொழி என்றுதான் சொல்வார் கள். நீலகேசியையும், மணிமேகலையையும் படித்த பிறகுதான் அது தத்துவ மொழி என்று புரிந்தது. தெய்வீக மொழியென்றால் திருக் கோவில்களில் தமிழில் மட்டுமே அர்ச்னை மொழி என்று சொல்லத் தயாரா? முருகன்தான் மெய் யான கடவுள் என்று தமிழ்பக்தர்கள் கூறுகிறார் கள். அவர்கள் மனம் குளிரும் வகையில் முரு கப்பெருமானின் கருவறையிலாவது தமிழ் மட்டுமே வழிபாட்டுமொழி என்று அறிவிக்கத் தயாரா? தமிழ்ப்பற்று என்பது இவர்களது மோசடி வாதம்.
இந்தியைத் தவிர அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் பிராந்திய மொழி என்கின்றனர். 8-ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் இந்தியை மட்டும் உருவி அலு வல் மொழியாக ஏன் வைக்க வேண்டும்? முதலில் இந்தியைக் கொண்டுவந்து பிறகு சமஸ்கிருதத்தைக் கொண்டுவருவதுதான் இவர்களின் நோக்கம். ஆர்எஸ்எஸ் 1958-ல் உரு வாக்கிய தீர்மானத்தில் ‘மாகாணங்களுக்கு இடையிலான தொடர்புக்கான பொது மொழி யாக இந்தி உருவாகிவிட்டது. இப்படியாகவே அனைத்து அலுவல் நோக்கங்களுக்கும் அதை யே பயன்படுத்த வேண்டும். சமஸ்கிருத்தத்தின் அடிப்படையிலேயே அனைத்து மொழிகளை யும் வளர்க்க முடியும் என்பதால் அதை கட்டாய மாக்கப்பட வேண்டும்’ என்று உள்ளது. இவர் களின் நோக்கம் நாட்டின் ஒரே மொழியாக, ஆட்சி மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டுவருவது தான். இடைக்கால ஏற்பாடாகத்தான் இந்தி. இந்த நேரத்தில்தான் நாம் எட்டாவது அட்ட வணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழி ஆக்குக என்பதை வலுவாக முன்னெ டுக்க வேண்டும்” என்றார். ஒன்றிய அரசின் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு என்ற தலைப்பில் நடந்த 3வது அமர்விற்கு துணைப் பொதுச்செயலாளர் உமா தலைமை வகித்து பேசினார். எழுத்தாளர் பேரா.பெருமாள் முருகன் பேசினார்.
தற்போது நடப்பது என்ன?
தமுஎகச கவுரவத் தலைவரும், மதுரை நாடா ளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் பேசு கையில், வடமொழிக்கு அல்லது குறிப்பிட்ட மொழிக்கு எதிரானது அல்ல நமது முழக்கம். ஆதிக்கத்தின் ஆட்சி பீடத்தோடு 1938ல் வந்த போது தமிழகம் களம் கண்டது. 1938, 1945, 1949, 1952, 1959, 1965, 1980ஆம் ஆண்டுகளில் மொழி ஆதிக்கத்திற்கு எதிரான நீண்ட நெடிய போராட்ட வரலாறு இந்தியாவில் எந்த ஒரு நிலத்திற்கும் கிடையாது. தமிழகத்திற்கு மட்டும் உண்டு. தாய்மொழி சமஸ்கிருதம் என சங்கராச்சாரியர் கூறிய போது தந்தை மொழி தமிழ்மொழி என கூறியவர் வள்ளலார். 1938ல் பெரியார் நடத்திய போராட்டம் அரசியல் போராட்டம் அல்ல. தமிழ் சமூகத்தின் தேவைக்காக நடத்தப்பட்டது. இந்தி திணிப்பு பழைய முறையில் தற்போது இல்லை. ஒருபுறம் அமித்ஷா பயிற்று மொழியாக இந்தி தான் இருக்க வேண்டும் என்பார். இன் னொருபுறம் மோடி திருக்குறள், புறநானூறு, இந்திய நூல்களை பற்றி பேசுவார். இன்னொரு புறம் தெய்வ மொழி தமிழுக்கு திராவிட இயக்கத் தால் ஆபத்து என பேசுவார். அதாவது மொழி தான் விவாதத்தின் மையப்பொருள். ஆனால் அந்த மொழியை அவர்கள் கோணத்தில் அனைத்து பக்கத்திலும் சுற்றிவிடுவார்கள். இந்தி ஆதிக்கத்தின் அடையாளமாக கல்வி யிலோ, நிர்வாகத்திலோ, நீதிமன்றத்திலோ வந் தால் அதை எதிர்க்கின்ற குரல் மட்டுமல்ல, அதற்கு எதிரான வெற்றியை இந்தி அல்லாத அனைத்து மொழிகளுக்குமான வெற்றியாக மாற்றும் வலிமை தமிழகத்திற்கு உண்டு என்றார்.
போராட்ட அறைகூவல்
செயல் திட்டத்தை முன்மொழிந்து தமுஎச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசு கையில், அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் இந்தி திணிப்பு பரிந்துரைகளுக்கு எதி ராக பரப்புரை செய்து மக்களை திரட்டுவதற்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் ஒத்தக் கருத்துள்ள அமைப்புகளின் கூட்டமைப்பு ஒன் றினை உருவாக்குவது; மொழிப்போர் வரலாற்றி னையும் இப்போதைய ஆபத்தினையும் விளக் கிடும் வகையில் மாவட்டங்களில் மாநாடு, கண் காட்சி, கருத்தரங்கம், பேரணி நடத்துவது; மொழி யுரிமை, தாய்மொழி கல்வியின் அவசியத்தை மையப்படுத்தி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்துவது; மாநிலத்தின் பல்வேறு முனை களில் இருந்து மொழிப்போர் தியாகிகளின் நினைவிடங்களிலிருந்து சென்னை நோக்கி வாகன பரப்புரை, நிறைவில் சிறப்பு மாநாடு; மாநாட்டில் அகில இந்திய அளவில் இந்தி திணிப்புக்கு எதிராக குரலெழுப்பி வரும் ஆளு மைகள், அமைப்புகளை பங்கேற்கச் செய்வது; அலுவல் மொழி நாடாளுமன்றக் குழுவின் இந் தித்திணிப்பு பரிந்துரைகளை ஏற்க வேண்டாம் என குடியரசு தலைவரிடம் நேரில் முறையிடு வது எனத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். செயல் திட்டத்தை முன்மொழிந்து இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் நிருபன் சக்கர வர்த்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் சிங்காரவேலு ஆகியோர் பேசினர். முன்னதாக மாநிலத்துணைத்தலைவர் ஆர்.நீலா வரவேற்றார். முடிவில் திருச்சி மாவட்ட செயலாளர் ரங்கராஜன் நன்றி கூறினார்.