சென்னை,பிப்.21- தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை(பிப்.21) நடைபெற்ற வினாக்கள் விடைகள் நேரத்தில் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, “ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு நிறுத்தப் பட்டுள்ளது. ‘பெல்ட்’ ஏரியா என்று வகைப்படுத்தி வைத்துள்ள இடத்திற்கு முதலமைச்சர் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,“மேய்க்கால் புறம்போக்கு நிலம் தொடர்பாகவும், ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு வழங்குவது குறித்தும், ஏற்கனவே முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளுடன் கலந்து ஆலோ சனை நடத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தால் அதை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை. அரசு அதற்கான அனைத்து முயற்சி களையும் மேற்கொண்டு வருகிறது” என்றார்.