tamilnadu

img

கறுப்புச் சட்டையுடன் வந்த காங்.எம்எல்ஏக்கள்

சென்னை, மார்ச் 27- ராகுல் காந்தி தகுதி நீக்கத் திற்கு கண்டனம் தெரிவித்து திங்களன்று (மார்ச் 27) தமிழ் நாடு சட்டப்பேரவைக்கு காங்கி ரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கறுப்புச் சட்டை அணிந்து வந்தனர். கோரிக்கை பதாகைகள்              மேலும், ராகுல் காந்தியை ஆதரித்து பதாகைகளையும் கொண்டு வந்தனர். பேரவைக் குள் பதாகைகளை எடுத்து  செல்ல காங்கிரஸ் எம்எல்ஏக் கள் முயன்றனர். அதற்கு பேர வைத் தலைவர் மு. அப்பாவு  அனுமதிக்கவில்லை. இதனை யடுத்து, பதாகைகளை வெளியே  வைத்துவிட்டு உள்ளே சென்றனர்.

சிரிப்பலை!

அதன்பின்னர் சட்டப்பேர வைக்கு வந்த பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீநிவாசனிடம் நீங்கள் காங்கிரஸ் போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்க, “ஐயோ இன்னிக்கா அது. எனக்குத்  தெரியாதே” என்று கூறியபடி நகர்ந்து சென்றார். பேரவைக்குள் வந்த அவரிடம் பேரவைத் தலைவர்  அப்பாவு, “கறுப்பு ஆடையில் வந்துள்ளீர்களே. நீங்களும் அவர்களின் (காங்கிரஸ்) நிலைப் பாட்டினை ஆதரிக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு வானதி  சீனிவாசன், “அவசரநிலை பிர கடன கால அடக்குமுறைகளை எதிர்த்து கறுப்பு ஆடையில் வந்துள்ளேன்” என்று கூறி சமாளித்தார். அப்போது பேர வையில் சிரிப்பலை எழுந்தது. அவரது கறுப்பு நிற ஆடை யால் சட்டப்பேரவைக்கு வெளி யேயும் உள்ளேயும் சில சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்தன. சட்டப்பேரவையில் நேர மில்லா நேரத்தில் ராகுல் விவகா ரம் குறித்து ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம் கொண்டு வந்து காங்கிஸ் கட்சியின் சட்டமன்றகுழுத் தலைவர் கு.செல்வப் பெருந்தகை பேசி முடித்ததும், பாஜகத் தலைவர் நையினார் நாகேந்திரன் பேச முயற்சித்தார். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக மக்க ளவையில் திமுக தலைவர் டி.ஆர்.பாலு பேச உள்ளதால் செல்வப்பெருந்தகை பேசி யதை முழுமையாக நீக்கம் செய்வதாக கூறினார்.

பேரவைத் தலைவர் நடவடிக்கையில் வருத்தம்

சிறிது நேரத்தில் காங்கி ரஸ் உறுப்பினர்கள் அனை வரும் ஒட்டுமொத்தாக பேரவை யிலிருந்து வெளியேறினர். பிறகு, செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை,“ நாடு அசாதாரணமான ஒரு  சூழ்நிலையில் சிக்கிக்கொண் டுள்ளது. மார்ச் 23 அன்று நடந்த ஜனநாயக படுகொலையை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தோம். ஆனால், பேரவைத் தலைவர் நான் பேசியது அனைத்தையும் நீக்கம் செய்துவிட்டார். பேர வைத் தலைவரின் நடவடிக்கை  வருத்தம் அளிப்பதால் வெளி நடப்பு செய்தோம்”என்றார். தொடர்ந்து பேசிய அவர்,  “இந்திய வரலாற்றில் முதல்  முறையாக வழக்கு தொடர்ந்த வரே தடை வாங்குகிறார். அதுவும் 24 நாட்களில் வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பையும் வழங்கியுள்ளனர். தீர்ப்பு வழங்கப்பட்ட 24 மணி நேரத்தில் ராகுல் காந்தி எம்.பி.  பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது ஜனநாயகப் படுகொலை. ஹிட்லர், முசோலினியை போன்று மோடியும் அமித்ஷாவும் ஆட்சியை நடத்தி வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏக்- கள் வன்மையாக கண்டிக்கி றோம். இதற்காக உள்ளிருப்பு போராட்டத்தையும் நடத்து வோம்”என்றும் அவர் கூறினார்.