சென்னை, டிச. 26 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினம் மற்றும் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 97 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி டிசம்பர் 26 ஞாயிறன்று பாலன் இல்லத்தில் நடைபெற்றது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களின் 97வது பிறந்த நாளான டிசம்பர் 26 அன்று நிகழ்வில் கலந்து கொண்டு ஆர்.நல்லக்கண்ணுவுக்கு சால்வை அணிவித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதலமைச்சர் பேசுகை யில், “தோழர் நல்லக்கண்ணுவை இளைஞராகத் தான் பார்க்கிறோம். மக்களுக்கு, நாட்டிற்கு, பாட்டாளி வர்க்கத்திற்கு தொடர்ந்து பாடு பட்டுக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளன்று சந்தித்து வாழ்த்துவதோடு, வாழ்த்தையும் பெற்று வரு கிறோம். திமுக சார்பில் நெஞ்சார வாழ்த்து கிறோம். நூற்றாண்டு காண காத்திருக் கிறோம். பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறோம்” என்றார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோ வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செய லாளர் அமர்ஜித் கவுர், மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநில துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன் எம்.பி., மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.