அங்கன்வாடி மையங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் பில்லுக்கான முழுத் தொகையை அரசு வழங்க வேண்டும்; அங்கன்வாடி மையங்களுக்கும் பள்ளி, கல்லூரி போல ஒரு மாதம் விடுமுறை வழங்க வேண்டும்; காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை உரையாற்றினார்.