புதுதில்லி, ஜன.28- தீவிரமான தேசியவாதம், இந்துத் துவா அமைப்புகளின் வெறுப்புப் பேச்சுக்கள், பாபர் மசூதி இடிப்பு, மாட்டிறைச்சி வன்முறை, கர்வாப்சி அரசியல் போன்றவை இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊட்டி வளர்ப்பதாக, அண்மையில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில், பல்வேறு மாநில டிஜிபி-க்கள் அறிக்கை முன் வைத்தி ருந்தனர். இஸ்லாமிய மற்றும் இந்து அமைப்புக்களின் தீவிரவாத நடவ டிக்கைகள் தொடர்பான டிஜிபி-க்களின் அந்த அறிக்கைகள், விவா தங்கள் இணையதளத்திலும் வெளி யாகி இருந்தன. இந்நிலையில், டிஜிபி-க்களின் அறிக்கைகள், இஸ்லாமிய அமைப்பு கள் மட்டுமன்றி, சங்-பரிவார் அமைப்புகளின் இந்துத்துவா தீவிர வாத நடவடிக்கைகள் பற்றியும் அம்ப லப்படுத்துவதால், அவற்றை இணை யத்திலிருந்து நரேந்திர மோடி அரசு நீக்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், அகில இந்திய காவல்துறை தலைவர்கள் மாநாடு (Conference of Director Generals and Inspector Generals of Police) தில்லியில் நடைபெறும். இந்தாண்டும் ஜனவரி 20 முதல் 22 வரை தில்லியில் காவல்துறைத் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா உள் ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், நாட்டில் வளர்ந்து வரும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்து, விவாதித்துள்ளனர். அப்போதுதான், இஸ்லாம் மற்றும் இந்துத்துவா ஆகிய இரு பிரிவு அமைப்புகளுமே நாட்டில் தீவிர வாதத்தை ஒன்றுக்கொன்று ஊட்டி வளர்ப்பதை அதிகாரிகள் கவலை யோடு தெரிவித்துள்ளனர். விஎச்பி மற்றும் பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளை தீவிரவாத அமைப்புகள் என்ற வகைப்படுத்தி யும் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். பாபர் மசூதி இடிப்பு, இந்து தேசிய வாதத்தின் வளர்ச்சி, மாட்டிறைச்சி படுகொலை வழக்குகள் மற்றும் “கர் வாப்சி இயக்கம்” ஆகியவை இளை ஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் கொண்டு செல்கின்றன என்றும் ஒரு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (PFI) போன்ற அமைப்புகளின் இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் சித்தாந்தங்களை எதிர்கொள்வ தற்கு, மேற்கண்ட விஎச்பி, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளின் செயல் பாடுகள் மீது கவனம் செலுத்த வேண்டும்; அவற்றின் மீது நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. அரசி யலில் சிறுபான்மையினருக்கு அதிக பிரதிநிதித்துவம், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது போன்ற வையும் இஸ்லாமியத் தீவிர வாதத்தை எதிர்கொள்வதில் முக்கிய மான பங்காற்றும் என்று அரசுக்கு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. காவல் கண்காணிப்பாளர் அந் தஸ்திலான அதிகாரி ஒருவர், தீவிர வாதத்தை இடதுசாரி, வலது சாரி மற்றும் இஸ்லாமிய அடிப்படை வாதம் என்ற அடிப்படையில் வகைப் படுத்தியுள்ளார். “தீவிர வலதுசாரி தனிநபர்கள் அல்லது குழுக்கள், அரசு பற்றிய அதிகாரப்பூர்வமான கருத்தைக் கொண்டுள்ளனர். இதில் அரசும் மக்களும் ஒரே மாதிரியானவர்கள். இந்த இருவரும் தீவிரவாதத்திற்கு எதிராக ஒரே புள்ளியில் இணைய வேண்டும். இந்தியா ஒரு பன்மைச் சமூகமாக இருந்தாலும், பெரும் பான்மைவாதத்தை நோக்கிச் செல் வது போன்ற சித்தரிப்பு உள்ளது. ஆனந்த் மார்க், விஎச்பி, பஜ்ரங் தள், இந்து சேனா போன்ற அமைப்பு களால் இது நடக்கிறது” என்று அந்த அதிகாரி தனது அறிக்கையில் கூறி யுள்ளார். இஸ்லாமிய அடிப்படைவாதி களை “ஒரு அச்சுறுத்தல்” என்று விவ ரிக்கும் அதே அதிகாரி, “இஸ்லா மியக் கண்ணோட்டம் என்பது அடிப்ப டையில் உலகை இரண்டு வேறுபட்ட கோளங்களாகப் பிரிக்கும் ஒன்றா கும்: அதாவது ‘முஸ்லிம்கள்’ ஒரு புறம், பிஎப்ஐ, தவ்தே-இஸ்லாமி, தவ்ஹீத், கேரளா நத்வத்துல் முஜா ஹிதீன் போன்ற இஸ்லாமிய அமைப்புகள் மறுபுறம் என்று இரண் டாக பிரித்துப் பார்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
தீவிரவாத சவால்களை எதிர் கொள்வதில், பாதுகாப்பு அமைப்பு களின் (காவல்துறை மற்றும் உள வுத்துறை) விகிதாச்சாரமற்ற பயன் பாடு ஒரு சிக்கலாக உள்ளது. அறி ஞர்கள், உளவியலாளர்கள், சிவில் சமூகத்தின் குறைந்தபட்ச பங்கு முக்கியமாக உள்ளது. தீவிரவாத பிரச்சனைகளைக் களைவதற்கான கொள்கைகள் இல்லை. கட்ட மைப்புக் குறைபாடுகளும் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, “நியோ-நாஜி தீவிர வாதிகளை சீர்திருத்துவதை நோக்க மாகக் கொண்ட ‘இனவாதத்திலி ருந்து வெளியேறு’ (EXIT Deutschland) என்ற ஜெர்மனியின் நீண்டகால திட்டம் போன்றவை இந்தியாவுக்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளார். பரபரப்பைக் கிளப்பும் சதிகார இணையதளங்களின் இஸ்லாமோ போபியா, மற்றவர்கள் மத்தியில் முஸ்லிம்கள் மீதான எதிர்மறையான சமூகப் பார்வைக்கு வழிவகுக்கின் றன. இவை தடுக்கப்படவேண்டும். தீவிரவாதப் போக்கை தடுப்பதற்கு மற்றொரு முக்கியமான தீர்வு, மக் கள், அவர்களின் குறைகளையும் கோபத்தையும் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் வெளிப் படுத்த மேடைகள் (Platforms), அமைப்புகளுக்கு இடம் கொடுக்கப் படவேண்டும் என்றும் பரிந்துரைத் துள்ளார். காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்திலான மற்றொரு அதிகாரி, இஸ்லாமிய அடிப்படைவாதம் மற் றும் இந்து தீவிரவாதம் ஆகிய இரண்டுமே சவால்கள் என்று தெரி வித்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகளுடன் தொடர்புடைய அரசியல்-மத தீவிரவாதத்தின் கீழ் அவர் இந்த இரண்டு பிரிவினரை யுமே அவர் வரிசைப்படுத்தியுள்ளார். வலதுசாரி தீவிரவாதமானது, பாசி சம், இன மேலாதிக்கவாதம் மற்றும் அதிதேசியவாதத்துடன் இணைக்கப் பட்டுள்ளது என்றும், மாவோயிஸ்ட் வன்முறையுடன் தொடர்புடையது இடதுசாரி தீவிரவாதமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
“இந்து தேசியவாதத்தின் வளர்ச்சியான பாபர் மசூதி இடிப்பு, மாட்டிறைச்சி படுகொலை வழக்கு கள் மற்றும் ‘கர் வாப்சி இயக்கம்’ ஆகியவை இஸ்லாமிய தீவிரவாத பாதைக்கு இளைஞர்களை இட்டுச் செல்கிறது” என்றும் அந்த அதி காரி தனது ஆய்வறிக்கையில் தெரி வித்துள்ளார். “உதய்பூரில் கன்னையா லால் கொல்லப்பட்டது, நபிகள் நாய கத்தைப் பற்றிய முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா வின் கருத்துகளுக்கு எழுந்த எதிர் வினையின் முக்கியமான உதா ரணம். அனைவரும் மதக் கருத்துகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண் டும் என்பதை நூபுர் சர்மாவின் பேச்சு காட்டுகிறது. அதேபோல், மத உணர்வுகளை இழிவுபடுத்தும் சம்ப வங்கள் தொடர்ந்து நடைபெற்று வரு கின்றன. எனவே, ‘சட்டத்தின் ஆட்சி’ பற்றிய வலுவான உணர்வை நாம் வழங்க வேண்டும். உதய்பூரில் கன்னையா லால் கொலையில் குற் றம் சாட்டப்பட்டவர்களை தீவிரவாதி களாக மாற்றியதில் உள்நாட்டிலி ருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பரப் பப்பட்ட தூண்டுதல் வீடியோக்கள் மற்றும் செய்திகள் முக்கிய பங்கு வகித்தன” என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மையினர், அரசியல் மற்றும் நிர்வாக செயல்முறைகளின் ஒரு பகுதியாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். மதரசாக்களை நவீனமயமாக்க வேண்டும். சிறுபான்மையினர் பகுதி களில் தொழில் நிறுவனங்களை நிறுவ வேண்டும். இவையே இஸ்லா மிய தீவிரவாதத்திற்கான தீர்வு களாக இருக்க முடியும் என்று டிஜிபிக்கள் மாநாட்டில் வலியுறுத் தப்பட்டு உள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வு களால் தீவிரவாதம் அடிக்கடி தூண்டப்படுகிறது. பாலஸ்தீனியர் களின் அவலநிலை, ஆப்கானிஸ்தா னில் சோவியத் தலையீடு, இராக் மீதான அமெரிக்காவின் படையெ டுப்பு மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் ஊடுருவல்; பாகிஸ்தா னில் நடைபெறும் ராணுவ நடவ டிக்கைகள்; டேனிஷ் கார்ட்டூன் சர்ச்சை; சுதந்திரத்திற்குப் பிறகு ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹைதரா பாத் விடுதலை; வகுப்புவாத கல வரங்கள்; பாபர் மசூதி இடிப்பு, 2002 கோத்ரா கலவரம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன் றவை தீவிரவாத தூண்டுதலின் பின்னணியில் உள்ளன. இந்நிலை யில், மதச்சார்பற்ற, தேசபக்தி மிக்க மற்றும் அறிவார்ந்த முஸ்லிம் இளை ஞர்களை தீர்வுக்கான பணிகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி மற்றும் வேலைகளில் இஸ்லா மியர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டு உள்ளது. மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இதுபோன்ற அனைத்து ஆவ ணங்களுமே கடந்த செவ்வாய்க் கிழமை வரை மாநாட்டின் இணை யதளத்தில் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால், இஸ்லாமிய தீவிர வாதத்திற்கு, இந்துத்துவா நட வடிக்கைகள் காரணம் என்பதை யும், இந்துத்துவா தீவிரவாதம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; இஸ்லாமிய இளைஞர்கள் தீவிர வாதத்தின் பின்னால் அணிதிரள் வதைத் தடுப்பதற்கு தனித் திட் டங்கள், சிறப்புக் கொள்கைகள் உரு வாக்கப்பட வேண்டும் என்றும் அறிக் கைகள் வலியுறுத்துவதால், இந்த அறிக்கைகளை நரேந்திர மோடி அரசு தற்போது நீக்கியுள்ளது.