tamilnadu

img

மத மாநாடு என்ற போர்வையில் அரசியல் நடத்துவது கண்டிக்கத்தக்கது

நாகர்கோவில், பிப். 20 சாமிதோப்பில் அய்யா வைகுண்டர்  பிறந்த தினவிழா ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. கூட்டத்துக்கு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை தலைவர் பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சி.ராஜன், ஆர்.எஸ்.பார்த்த சாரதி, சத்தியசேகர், பால்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  மாசி 20ஆம் தேதி அய்யா வைகுண்டசாமி பிறந்த தினவிழாவை சிறப்பாக கொண்டாடுவது எனவும், இதையொட்டி மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து குரு. பால ஜனாதிபதி நிருபர்களிடம் கூறியதாவது :-  ஆலய திருவிழாக்களைப் பொறுத்தவரை மாநாடு என்ற பெயரில் அரசியல் பேசுவது அவசியமற்றது. மத  விரோதமானது. சில அமைப்புகள் ஆலய வளாகத்துக்குள் மாநாடு நடத்து வதற்கு சில சூழ்நிலைகளில் அனுமதி  அளித்திருக்கலாம்.

அந்த மாநாடுகள் அந்த மதங்களின் பெருமைகளைப் பற்றி பேசுவதாக அமைந்து இருக் கிறது. அண்மைக் காலமாக மத போர்வையில் ஆலய விழாக்களில் அரசியல் மாநாடு நடத்துகிற அநாகரீக போக்கை பாரதிய ஜனதா கட்சி  கையில் எடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  மண்டைக்காட்டில் 80 ஆண்டு களுக்கு மேலாக மாநாடு நடத்தி யுள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது அங்கு நடை பெறும் மாநாடு மதம் போதிக்கும் ஆன்மீக மாநாடாக நடத்தப்படாமல் மத வெறுப்பை எடுத்துச் சொல்லுகிற பா.ஜ.க. வின் பொதுக்கூட்டம் போன்று நடத்துவது கண்டிக்கத்தக்கது.  இந்தப் பிரச்சனையில் அறநிலை யத் துறையின் முடிவு நியாயமானதாக உள்ளது. மத நம்பிக்கையை பாது காப்பதாகவும் அமைகிறது. குமரி மாவட்டத்தில் இந்து ஆலயத்தின் திருப்பணிகளுக்காகவும், வளர்ச்சிக் காகவும் மாநில அரசு ரூ.100 கோடிக்கும்  அதிகமாக நிதி ஒதுக்கீடுசெய்துள்ளது. அரசின் மக்கள் நல திட்டங்களை அரசியல் களத்தில் சந்திக்க முடியாத பா.ஜ.க., ஆலய வளாகத்துக்குள் மத  மாநாடு என்ற போர்வையில் அரசியல் மாநாடு நடத்துவதை கைவிட வேண்டும்.  மேலும், அரசின் முடிவுக்கு  மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.