சென்னை/கபிஸ்தலம், டிச.11- திரு ஆரூரான் சர்க்கரை ஆலையில் விவசாயிகள் பெயரில் கோடிக்கணக்கில் மோசடி செய்த ஆலை முதலாளியை விட்டு விட்டு, போராடும் விவசாயிகள் கைது செய்யப்பட்டிருப்பதற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வேல்மாறன், பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கரும்பு பயிர்க் கடன் சுமார் 85 கோடி ரூபாயை விவசாயிகள் ஆலைக்கு அனுப்பிய கரும்பு கிரையப் பணத்தில் ஆரூரான் ஆலை பிடித் தம் செய்து கொண்டு அப்பணத்தை வங்கிக்கு செலுத்தவில்லை. விவசாயிகளிடம் பிடித்தம் செய்த பணத்தை வங்கிக்கு ஆரூரான் ஆலை செலுத்த வேண்டும்.
ஆரூரான் ஆலை விவசாயிகள் பெயரில் வங்கிகளில் பெற்ற ரூ.200 கோடிக்கும் அதிக மான கடன் தொகையை ஆலை நிர்வாகம் வங்கிகளுக்கு செலுத்திட வேண்டும். கடன் வலையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி 30-11-2022 முதல் கடந்த 12 நாட்களாக திருமண்டங்குடி ஆரூ ரான் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயி கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் 9 அன்று தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் ஆரூ ரான் ஆலை நிர்வாகிகளை அழைத்து கும்ப கோணம் ஆர்டிஓ பூர்ணிமா பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் விவசாயி களின் கோரிக்கைகளை ஏற்காததால் போராட்டம் தொடருகிறது. இந்நிலையில், போராடும் ஆரூரான் சர்க் கரை ஆலை விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்ப கோணம் ஆகிய மூன்று இடங்களில் சனிக் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்ற மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார் உட்பட 70 விவசாயி களை காவல்துறை கைது செய்தது. மோசடி செய்த ஆரூரான் சர்க்கரை ஆலை முதலாளி யை கைது செய்யாமல் போராடும் விவசாயி களை கைது செய்துள்ளதை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் கண்டிக்கிறோம். போராடும் விவசாயிகளை அடக்க முயற்சிக்காமல் மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் ஆரூரான் ஆலை கரும்பு விவசாயி கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
12 ஆவது நாளாக போராட்டம்
இதனிடையே, சர்க்கரை ஆலை தொடர் பான பேச்சுவார்த்தைகளை விவசாயிகள் முன்னிலையில் வெளிப்படையாக நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு ஞாயிற்றுக்கிழமை 12-ஆவது நாளாக காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.மாசிலாமணி ஆதரவு தெரிவித்தார். அச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சாமு.தர்ம ராஜன், சிபிஐ மாவட்ட துணைச் செயலா ளர் ஆர்.செந்தில்குமார், திருவாரூர் மாவட் டக் குழு உறுப்பினர் கோ.வி.அறிவழகன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் பொன்.சேகர், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற னர்.