சென்னை,ஜன.28- பெண்கள் பணி நியமனத்திற்கு எதிரான பாரத ஸ்டேட் வங்கியின் செயலை உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு (சிஐடியு) வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில கன்வீனர் தனலெட்சுமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பாரத் ஸ்டேட் வங்கி 31.12.2021 அன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பெண்கள் நியமனத்திற்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. முறையான செயல்முறை மற்றும் தேர்வு முறை மூலம் தேர்ந்தெடுக்கப் பட்ட போதிலும், மூன்று மாதங்களுக்கும் மேலாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பணி யில் சேருவதைத் தடுக்கிறது. அவர்கள் தற்காலிகமாகத் தகுதியற்றவர்களாக கருதப் படுவார்கள், குழந்தைப் பெற்ற 4 மாதங் களுக்குப் பிறகு தான் அவர் பணியில் சேர அனுமதிக்கப்படுவார். இது பெண்களின் சேவையையும், அவர்கள் நிரந்தரமாகப் பெறும் பலன்களையும் பாதிக்கும். இயற்கை மற்றும் சமூக இனப்பெருக்கம் செயல்முறையின் ஒரு பகுதியாக கர்ப்பம், குழந்தை வளர்ப்பு என்பது இயற்கை நியதி யாகும்.
பெண்கள் நாட்டின் மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் மட்டு மல்ல ஊதியம் பெறாத பணிகளை செய்து வருகிறார்கள். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்துறையில் இருந்து வந்துள்ள இந்த உத்தரவு கண்டிக்கத்தக்கதாகும். பெண்களுக்கு அதிகாரமளித்தல், முன்னேற்றம், சமத்துவம் என்று பொய்ப்பிரச் சாரம் செய்யும் மோடியின் தலைமை யிலான இந்த அரசு மறுபக்கத்தில் பிற்போக்குத் தனத்தின் உச்சகட்டமாக மேற்கண்ட செயலை செய்கிறது. இதன் விளைவாக ஆணுக்கு இணை யான தேர்வுகள் மூலம் பணி நியமனத் திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் சமூ கத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் இயல்பான, இயற்கையான செயலாக இருந்த போதிலும் அவர்களின் கர்ப்பம், குழந்தை பிறப்பை காரணம் காட்டி தேர்ந்தெடுக்கப் பட்ட பதவியில் சேர தடைவிதிப்பது சமூக நீதி க்கு எதிரானதாகும்.
இந்த முடிவின் விளை வாக அவர்கள் தனது பணி மூப்பு மற்றும் வருமானத்தை இழக்கிறார்கள். இது அவ ரது வாழ்க்கையில் நிரந்தர எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். 2009ஆம் ஆண்டு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)வின் தேசியத் தலைவர் எம்.கே.பாந்தே, அப்போதைய நிதியமைச்ச ரான பிரணாப் முகர்ஜியை சந்தித்து இப்பிரச்ச னை மீது தலையிட்டு, கர்ப்பிணிப் பெண்களை பணி நியமனம் செய்வதைத் தடை செய்யும் வெட்கக்கேடான மற்றும் பாரபட்சமான நடைமுறையை நிறுத்த வேண்டுமென்றும், பெண்களின் மாதவிடாய் காலத்தை சமர்ப் பித்தால்தான் அவர் தேர்வுசெய்த பதவியில் சேர அனுமதிக்கப்படும் என்ற நிலையை எதி ர்த்து போராடி அன்று நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் தற்போது நாட்டின் மிக முக்கிய பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி மீண்டும் இத்தகைய கொடூரமான நடவடிக்கையை கொண்டு வருவதை சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு வன்மையாக கண்டிப்பதோடு அந்த ஆணையை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறது.