சென்னை, நவ.1- மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வியாழனன்று நடை பெறும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்ப தாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தி யாளர்களை சந்தித்த அவர், “தமிழ்ச் சமூ கத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடி யவர் சங்கரய்யா. அப்படிப்பட்டவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுக்கிறார். ‘ஏன் அவருக்கு கொடுக்க வேண்டும்?’ என்று கேட்கிறார். ஆளுநருக்கு சமூக நீதி, திராவிட மாடல், சமத்துவம் என்று பேசுபவர்களை பிடிப்பதில்லை. 102வது வயதில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொதுவுடைமை வாதி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க மறுப்பதன் காரணம் என்ன? இதன்மூலம் ஆளுநர் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது. மருது சகோதரர்கள் தொடர்பான விழாவில், தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்களை மதிப்பதில்லை என்று ஆளுநர் கூறு கிறார்.
ஆனால் மருது சகோதரர்கள் முதல் பலர் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அண்ணா தொடங்கி தற்போது இருக்கும் முதல்வர் ஸ்டாலின் வரை அனைவரும் உரிய மரியாதை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யா விற்கு உரிய மரியாதையளிக்க ஆளுநர் மறுக்கிறார். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, ஆளுநர் ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்; அவர்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களை பார்த்தாலே பிடிக்காது. அந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து வந்ததால்தான் ஆளுநரும் அப்படியே நடந்து கொண்டிருக்கிறார். ஆளுநர் ஒரு நடிப்பு சுதேசி. அரசியலுக்கு வந்தது முதல் பல ஆளுநர்களை பார்த்திரு க்கிறேன்; ஆனால் இப்படி ஒரு மோசமான ஆளுநரை பார்த்ததே இல்லை. எனவே, பல்கலைக்கழக சிண்டிகேட்டும், செனட் தீர்மானம் நிறைவேற்றியும் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்து நவ.2 அன்று மதுரை காமராஜர் பல்கலையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை. இவ்வாறு அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.