ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு கண்டனம்
சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்
திருச்சிராப்பள்ளி, ஜூன் 11 - ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் ஜூன் 11 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, புதனன்று பிரச்சார இயக்கம் துவங்கிய நிலையில், டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. ஸ்ரீரங்கத்தில் நடந்த மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமை வகித்தார். இதில் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், சந்தானம், கிளைச் செயலாளர்கள் ராஜா, செல்லமுத்து, பகுதிக்குழு உறுப்பினர்கள் கோவிந்தன், ரகுபதி, சுப்ரமணி, சுரேஷ், செந்தில் உள்பட பலர், ராகவேந்திரா ஆர்ச்சிலிருந்து பிரச்சாரத்தை துவங்கி ராஜகோபுரம், தெற்கு வாசல், சாத்தார வீதி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். திருவாரூர் திருவாரூர் நகரக் குழு சார்பில், நகரச் செயலாளர் எம்.டி.கேசவராஜ் தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கமானது, திருவாரூர் நகர் பகுதியில் 30 வார்டுகளிலும் நடத்தப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகர் பகுதி கீழ வீதியில் தொடங்கிய பிரச்சார இயக்கம் கொடிக்கால்பாளையம், சேந்தமங்கலம், கிடாரம்கொண்டான், கமலாலய குளக்கரை, தெற்கு வீதி உட்பட நகரின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சுந்தரமூர்த்தி, பா கோமதி, டி.வீரபாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜி.பழனிவேல், எம்.கலைமணி மற்றும் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரக் குழு சார்பில் ஒன்றிய, மக்களை சந்தித்து நடைபயணமாக பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதற்கு நகரச் செயலாளர் கே.கோபு தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜி.ரகுராமன், சி.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.சாமிநாதன், இரா.மாலதி, டி.வி.காரல் மார்க்ஸ், நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.ஜெயபிரகாஷ், நகரக்குழு உறுப்பினர்கள் எஸ்.தண்டபாணி, ஏகே.செல்வம், என்.அன்புமணி, பி.ஆனந்த், என்.கோதாவரி, ஜி.தமிழ்மணி, கே.கார்த்திக், ஜி.கோகிலா மற்றும் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ராமலோகஈஸ்வரி, கிளை செயலாளர்கள், வெகுஜன உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நகரத்தில் 24 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கை கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். கரூர் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் வெங்கமேடு கடைவீதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்திற்கு வெங்கமேடு கிளைச் செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஹோச்சுமின், எஸ்.பி.ஜீவானந்தம், எம்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் சார்பில் மருவத்தூரில் தொடங்கிய பிரச்சார இயக்கத்திற்கு ஒன்றியச் செயலாளர் கே. அசோகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின் செங்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மூத்த தோழர் செல்லப்பன் கொடியசைத்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் புருஷோத்தமன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் டி.வி.குமார். கரிகாலன், கல்பனா ஆகியோர் பங்கேற்றனர். குத்தாலம் கடைவீதியில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் ராமகுரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் சிபிஎம் கீழையூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. சுப்பிரமணியன், கீழையூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.அப்துல் அஜீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.