சென்னை,டிச.1- ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுத்தா ளர்கள், செயற்பாட்டாளர்கள், பெண்ணிலை வாதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். வன்முறையான அழுத்தம் மூலம் திரைக்கலைஞர்களுக்கு மிரட்டல் விடுக்கும் சக்திகளுக்கு கண்டனம் தெரி வித்துள்ளனர். இதுகுறித்து எழுத்தாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், கல்வி யாளர்கள், பெண்ணிலைவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறி க்கையில் கூறியிருப்பதாவது:
சமூகநீதி அரசியலை, அதிகார அத்து மீறலை முன்வைத்து வெளியான ஜெய் பீம் திரைப்படம், தமிழக மக்களின் பரவலான ஏற்பைப் பெற்று மிகப் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவில் மட்டு மல்லாமல், உலக அளவிலும் தமிழ் சினிமா வுக்கு ஜெய்பீம் பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழ்த் திரை உலகின் நட்சத்திர நடிகரான சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை த.செ. ஞானவேல் இயக்கியிருக்கிறார். சாதிய ஏற்றத்தாழ்வு, மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்களின் துயர் சூழ்ந்த வாழ்வு ஆகியவை பற்றியது ஜெய் பீம் திரைப்படம். சமூக நீதி பற்றிய இந்த ஜெய் பீம் திரைப்படம், தமது சாதிக்கு எதிரானது எனத் தமிழகத்தில் உள்ள ஒரு சாரார், இந்தப் படத்திற்கும், இதன் இயக்குநர் த.செ. ஞான வேலுக்கும் ஜெய் பீம் படத்தைத் தயாரித்து நடித்த நடிகர் சூர்யாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்கள். ஒரு மாநிலங்களவை உறுப்பினர், ஒரு சட்ட மன்ற உறுப்பினர் உள்ளிட்ட குறிப்பிட்ட கட்சி யைச் சார்ந்தவர்கள், ஒரு சாதியைப் பிரதி நிதித்துவப்படுத்துவதாகச் சொல்லிக்கொள் பவர்கள் இத்தகைய அச்சுறுத்தலை விடுத்திருக்கிறார்கள்.இத்தனைக்கும் இப்பிரச்சனை பெரிதாவதற்கு முன்பே ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த. செ. ஞானவேல் , தாமாகவே முன்வந்து ஆட்சேபத்திற்கு உரியது எனச் சொல்லப்படுகிற குறியீட்டுப் பிம்பத்தை அகற்றி இருக்கிறார்.இதற்குப் பின்னும் ஜெய் பீம் படக் கலைஞர்கள், அவர்தம் குடும்பத்தினர் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் குறிப்பிட்ட சாதி அமைப்பைச் சார்ந்தவர்கள், பொது ஊடகங்களில் தொடர்ந்து பேசியும், நிர்ப்பந்தித்தும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகிறார்கள்.
வன்முறையான அழுத்தங்கள் தருவதன் மூலம் கலைஞர்களைப் பணியச் செய்வது என்பது, எதிர்காலத்தில் இனி எந்தக் கலைஞரை யும் சுதந்திரமாகப் படைப்புச் செயல்பாடுகளில் ஈடுபடுவதினின்றும் முடக்கிவிடும் ஆபத்துக் கொண்டது என நாங்கள் கருதுகிறோம். இத்த கைய போக்கு, சாதி மத பேதங்கள் கடந்த, பொதுச் சமூகத்தின் சொத்தான கலைஞர் களின் சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்ல, குடிமைச் சமூக உரிமைகளுக்கே எதிரானது எனவும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தவிரவும் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை வலியுறுத்தி நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளன என்பதையும் இத்தருணத்தில் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழகத்தின் சமூகநீதிக்கும், சமூக அமைதிக்கும் எதிரான வன்முறையைத் தூண்டும் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைச் சனநாயக இயக்கத்தினர், மனித உரிமையாளர்கள், வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வி யாளர்கள், பெண்நிலைவாதிகள், சமூகச் செயல்பாட்டாளர்களான நாங்கள் கண்டனம் செய்கிறோம். நீதியான, சமத்துவமான, அமைதியான தமிழகத்தை விழைகிற அனைவரும் இத்தகைய வன்முறைக்கு எதிராக, எம்முடன் இணைந்து சனநாயகக் கடமையாற்ற வருமாறு கனிவுடன் அழைக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டறிக்கையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் வசந்தி தேவி, மார்க்சிய / பெரி யாரிய ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலை ஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவர் ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் பெரு மாள்முருகன், தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றத்தின் சொக்கலிங்கம் உட்பட 34 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.