மதுரை, மே 23- மதுரையில் தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் ஸ்தாபக தலைவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன் மாறன், தே.லெட்சுமணன் ஆகி யோரின் நினைவு மலர் வெளியீடு, அயோத்தி படக்குழுவினர்க்கு பாராட்டு விழா, அமைப்பின் மாநி லச் செயலாளர் கே.அலாவுதீன் தலைமையில் மதுரையில் திங்க ளன்று மாலை நடைபெற்றது. நிகழ்விற்கு மாநிலப் பொருளா ளர் எம்.அகமது உசேன், மாநில துணைத்தலைவர் ஹாஜிமூசா, மாநிலச் செயலாளர் எம்.தாமஸ் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் என்.கணேசமூர்த்தி வரவேற்றார். மாநிலப் பொதுச்செயலாளர் எம். ராமகிருஷ்ணன் துவக்கவுரையாற்றி னார். மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன், தமுஎகச மாநி லத் தலைவர் மதுக்கூர் இராமலிங் கம், மதுரை தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எம்.பூமிநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
மலர் வெளியீடு
.லெட்சுமணன் ஆகியோரின் நினைவு மலரை அருட்தந்தை அந் தோணி பாப்புசாமி வெளியிட, சிறு பான்மை மக்கள் நலக்குழு மாநிலச் செயலாளர் வ.கல்யாணசுந்தரம் பெற்றுக் கொண்டார். மேலும் அயோத்தி திரைப்பட இயக்குநர் மந்திரமூர்த்தி பாராட்டப் பட்டார். அப்போது பேசிய அமை ப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், ‘‘பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்திலும் இதுபோன்ற சம்ப வங்கள் இந்துத்துவவாதிகளால் நிகழ்த்தப்படுகின்றன. இதிலிருந்து சிறுபான்மை மக்களைப் பாது காக்க நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். காஷ்மீர் பைல், கேரளா ஸ்டோரி போன்ற ஆயிரம் படங்கள் வந்தாலும் அயோத்தி படத்திற்கு நிகராகாது’’ என்றார். அருட்தந்தை அந்தோணி பாப்பு சாமி பேசுகையில், ‘‘என்.நன்மாறன் எளிமையான மனிதர். ஒன்றிய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அறிவித்தபோது உடனே அமைப்பின் மூலம் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். சுதந்திரப் போராட்ட வீரர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்களுக்கு அரசு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜார்ஜ் ஜோசப் நினைவு நாளின் போது அவரது சிலைக்கு நன்மாறன் மரியாதை செலுத்தி வந்தார். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சிறு பான்மையினர் வளர்ச்சிக்கு பெரி தும் பாடுபட்டவர்’’ என்றார்.
சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி பேசுகை யில், “தோழர் நன்மாறனின் வாழ்க்கை தியாகம், அர்ப்பணிப்பு நிறைந்தது. எனவே அவரின் லட்சி யத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல உறுதி எடுக்க வேண்டும். பிற திரைப் படங்கள் சொல்லாத கருத்துகளை அயோத்தி சொல்கிறது. இது கதையல்ல; இதுவே உண்மை; இதுவே நிஜம்; இன்றைய இந்தியா எப்படி இருக்கும் என்பதை மிக வும் நுட்பமாக படத்தில் கூறியுள்ள னர். மேலும் படத்தின் தலைப்பு சிறப்பானது. வகுப்புவாத சக்திகள் நமக்குள் பெரிய பிளவை கட்ட மைத்துள்ளனர். ஆனாலும் இந்த கட்டமைப்பு அவர்களுக்கு வெற்றி யைத் தரவில்லை என்பதை கர்நாடக மாநில தேர்தல் முடிவு காட்டுகிறது’’ என்றார். மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் பேசுகையில், ‘‘சிறுபான்மை நலக்குழுவை உரு வாக்கிய தலைவர்களில் முதன்மை யானவர்கள் என்.நன்மாறன், தே.லெட்சுமணன். மேலும் அமைப் பாகவும், செயலாகவும் எங்களுக்கு வழிகாட்டியவர்கள். தனது பேச்சுக் கலையால் நூற்றுக்கணக்கான செயல் வீரர்களை உருவாக்கியவர் தோழர் நன்மாறன். அயோத்தி அர சியல் பேசும் திரைப்படம். இந்த சம்பவம் கிராம வங்கி ஊழியர் சங்கத் தினரின் உண்மை கதையாகும். இன் றைய அரசியல், மதப்பிரச்சனையை கத்தி முனையில் நின்று பேசிய படம் தான் அயோத்தி” என்றார்.
தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், ‘‘ஜார்ஜ் ஜோசப் பற்றி எங்கு சென்றா லும் பேசுபவர் தோழர் நன்மாறன். தோழர்கள் நன்மாறன், தே.லெட்சு மணன் ஆகியோரின் பணிகளை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். பொய் வழக்கில் கைது செய்யப் பட்டு சிறையில் இருந்த ஸ்டேன் சுவாமி, நீதிமன்றத்தில் கேட்ட உறிஞ்சி குழாய் டம்ளர் கூட தர மறுத் தது பாஜக அரசு. புதிய நாடாளு மன்றக் கட்டிடத்தை ஒன்றிய பாஜக அரசு சாவர்க்கர் பிறந்த நாளில் திறக்க முடிவு செய்துள்ளது. இத்த கைய பின்னணியில் கர்நாடக மாநில வெற்றி என்பது நாம் கொண்டாட வேண்டிய ஒன்று. கர்நாடக ராம்நகர் தொகுதியில் மதவெறியர்கள் தோற்கடிக்கப்பட்டு, ஒரு இஸ்லா மியர் வெற்றி பெற்றுள்ளார். எதிர் வரும் காலம் மிகவும் அச்சுறுத்த லான காலமாக உள்ளது. எனவே நாட்டின் மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, மதநல்லிணக்கத்தை பாதுகாப்பது தான் நன்மாறன், தே.லெட்சுமணன் ஆகியோருக்கு நாம் செய்யும் உண்மையான மரி யாதையாக இருக்கும். ‘குஜராத் பற்றிய ஆவணத் தொகுப்புக்காக பிபிசி நிறுவனம் ஒன்றிய அரசின் ஏஜென்சிகளால் சூறையாடப் பட்டது. கேரளா ஸ்டோரி, காஷ்மீர் பைல் போன்ற பிரிவினைவாத படங் களுக்கு இடையே அயோத்தி படத்தை நாம் கொண்டாட வேண்டும். வெறுப்பு அரசியல் வளரும் சூழலில் அயோத்தி போன்ற படங்கள் ஆயிரம் ஆயிரம் வர வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பி னர் இரா. விஜயராஜன், மதுரை துணை மேயர் டி.நாகராஜன், பெரியார் தொண்டர் பி.வரதராசன், மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் மற்றும் தோழர் என்.நன்மாறனின் மகன்கள் என்.குணசேகரன், என்.ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொகுப்பு: எஸ்.பாபு