தோழர் டி.முருகேசன் 9 ஆம் ஆண்டு நினைவு தின கூட்டம்
அரியலூர், மே 7 - மறைந்த அரியலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் டி.முருகேசனின் நினைவு தின அஞ்சலி கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. அரியலூர் அண்ணாசிலை அருகில் நடந்த கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், திருச்சி மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் ஆகியோர் தோழர் டி.முருகேசனின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர். கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், எம்.வெங்கடாசலம், பி.துரைசாமி, ஏ.கந்தசாமி, வி.பரமசிவம், டி.அம்பிகா, தா.பழூர் ஒன்றியச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரியலூர் ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன், திருமானூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.சாமிதுரை, மூத்த நிர்வாகி சிற்றம்பலம் உள்ளிட்ட பலர் மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினர்.