திருச்சிராப்பள்ளி, மே 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பின ராக திறம்பட பணியாற்றி மறைந்த முது பெரும் தலைவர் ஆர். உமாநாத்தின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம் திருச்சிராப்பள்ளியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று கடைபிடிக்கப்பட்டது. பொன்மலை சங்கத்திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. அஞ்சலி நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருச்சிராப்பள்ளி மாந கர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, வழக்கறிஞர்கள் ராஜ்குமார், உ.நிர்மலாராணி, மாவட் டச் செயற்குழு உறுப்பினர்கள் கார்த்தி கேயன், வெற்றிச்செல்வன், லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாறன், ஜோன்ஸ், மாதர்சங்க மாவட்டச் செய லாளர் சரஸ்வதி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன், மாவட்டத் தலைவர் சூர்யா, பகுதிக்குழு உறுப்பினர் சீனிவாசன் உட்பட ஏரா ளமானோர் செவ்வணக்கம் செலுத்தி னர். கட்சியின் மாவட்டக் குழு அலுவலக மான வெண்மணி இல்லத்தில் நடை பெற்ற அஞ்சலி நிகழ்விற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் சிவராஜ், ரெங்க ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் சம்பத், தீக்கதிர் திருச்சிராப்பள்ளி பதிப்பு மேலாளர் ஜெயபால், குடிநீர் வடிகால் வாரிய மருதைராஜ் உள்ளிட்ட பலர் தோழர் ஆர்.உமாநாத் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.