tamilnadu

img

தோழர் பி. சீனிவாசராவ் நினைவு தினம் கடைப்பிடிப்பு

மதுரை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பி. சீனிவாசராவ் நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் கடைப்பிடிக்கப்பட்டது. மாவட் டக்குழு அலுவலகத்தில்   நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மாநகர்மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச்  செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் இரா.தெய்வராஜ், மா.கணேசன், அ.ரமேஷ்,ஜா.  நரசிம்மன், எம்.பாலசுப்பிரமணியம், வை.ஸ்டாலின், ஆர்.சசிகலா, சொ.பாண்டியன், பா.ரவிச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.நேரு, பி.கோபிநாத், டி.செல்வராஜ், முருகேசன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேனி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் போடியில் கடைப்பிடிக்கப்பட்டது. மூத்த தலைவர் கே.ராஜப்பன், தாலுகாசெயலாளர் எஸ்.செல்வம், எஸ்.கே.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் அன்னாரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.பூதிப்புரத்தில்  நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் தர்மர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.